கொழும்பு; தாம் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச. மேலும், தன்னையும், தன் குடும்பத்தாரையும் இலங்கை அரசு தொந்தரவு செய்கிறது என்றும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்புவில் நடந்த புகைப்படக் கண்காட்சியைக் காண வந்த ராஜபட்சவிடம் செய்தியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவரிடம், தற்போதைய இலங்கை அரசின் போக்கு குறித்து ஒரு கேள்வியைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் தற்போது அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். நான் சுதந்திரக் கட்சியின் சிறந்த தொண்டன். என சகோதரர்களையும் குழந்தைகளையும் விமர்சித்து வருவதை நிறுத்துங்கள். நான் தவறு செய்திருந்தால் எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். எதற்கும் நாங்கள் தயார் என்று கூறினார்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்: ராஜபட்ச
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari