புதுதில்லி: ‘இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களுமே பெறுவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்’ என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள சிறீசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரணாப் முகர்ஜி கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். இந்தியாவுக்கு வரும்படியும், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும் 15ம் தேதி சிறீசேன இந்தியா வருகிறார். இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து, சிறீசேன எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு மட்டுமல்ல; அண்டை நாடும்கூட! இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தொடர்பு உடையவை. இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கும், இதன் மூலம், உறவில் ஒரு புதிய உச்சத்தை எட்டுவதற்கும் இலங்கை தொடர்ந்து முயற்சி செய்யும். இந்த உறவால் ஏற்படும் பலன்களை, இரு நாட்டு மக்களும் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் கடிதம்
Popular Categories


