February 8, 2025, 9:34 PM
27.1 C
Chennai

உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது..

அலைஸ் என பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது.

உலகின் முதல் மின் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது. அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் மின்சாதனங்களை போல மின்வாகனங்கள் பெருகிவிட்டன.

மின்சார ஸ்கூட்டர், பைக், கார், ரெயில் ஆகிய பல வாகனங்களை கடந்து வந்துள்ளோம். இவற்றை போல சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில், விமானத்தை தயாரிக்க பொறியாளர்கள் ஆராய்ச்சியில் இறங்கினர்.அதன் பயனாக, டர்பைன் ரக என்ஜின் மூலம் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகை பிஸ்டன் ரக என்ஜின்களுக்கு மாற்றாக மின்சக்தியில் இயங்கும் என்ஜின்கள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  இந்த விமானம், வானில் 2 மணி நேரம் பயணிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆகவே நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது அல்ல. அதிகபட்சமாக 9 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தால் அதிகபட்சமாக 2,500 பவுண்டுகள் (சுமார் 1,100 கிலோ) எடையை சுமந்து கொண்டு பறக்க முடியும். அலைஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த மின் விமானம், இஸ்ரேலை தளமாகக் கொண்ட எவியேஷன் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இந்த பயணிகள் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 480 கிமீ வேகத்தை எட்டும். இது 250 கடல் மைல்கள் (400 கிமீ) தூரம் வரை செல்லும். வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட இந்த பயணிகள் விமானம் வானில் 3,500 அடி உயரத்தில் எட்டு நிமிடங்கள் பறந்தது. இதன்மூலம், வணிக பயன்பாட்டுக்கு விமானத்தை தயாரிப்பதற்காக முக்கியமான தரவுகள் கிடைத்துள்ளன.

மேலும், விமானத்தின் அமைப்புக்கு குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறது என்று எவியேஷன் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிகோரி டேவிஸ் தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories