January 26, 2025, 4:11 AM
22.9 C
Chennai

கத்தாரில் தண்டனையில் இருந்து தப்பி இந்தியா திரும்பிய 8 பேர்; பிரதமர் மோடிக்கு நன்றி!

#image_title

கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேர் விடுதலையாகி இன்று காலை புதுதில்லி வந்தனர். அவர்கள் தங்கள் விடுதலைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

கத்தாரில், தங்கள் நாட்டை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.

அவர்களை விடுதலை செய்ய, இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக, எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் விடுதலை செய்தது. இதை அடுத்து, புதுதில்லி வந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கும் விடுதலை கொடுத்தது கத்தார் அரசு! இது, இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அழுத்தத்தால் கத்தாரில் பணி புரிந்த 8 இந்தியர்களை சிறையிலடைத்தது கத்தார் அரசு. 8 பேரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலில் வெறியாட்டம் போட்டதை கண்டித்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கத்தார் அரசு இந்த 8 பேருக்கும் அக்.26ல் மரண தண்டனை விதித்தது. இதை அடுத்து கத்தார் அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பரில் கத்தார் இளவரசரை துபாயில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.

ALSO READ:  கணக்கெடுப்பில் பாரபட்சம்: அய்யனார்குளம் விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்!

இதைத் தொடர்ந்து எட்டு பேருக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரிலிருந்து வாங்கும் எரிவாயுவை மொசாம்பிக் உள்ளிட்ட இடங்களிலிருந்து வாங்க பாரத அரசு நடவடிக்கை எடுத்தது.. இந்நிலையில், கத்தார் நாடு அந்த எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.