4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!

mh370 - 2026நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தைத் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2014 மார்ச் மாதம் 8-ஆம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்குக்குப் புறப்பட்ட  எம்.எச்-370 விமானம்,  புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து  சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டன. ஆனால், அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவரவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சிக்னல்கள் ஏதும் பெறப் படாததால், விமானத்தைக் கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் எம்.எச்-370 விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என இரு வருடங்களுக்கு முன்னர் கூறப் பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அந்த விமானத்தின் இறக்கைகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், விமானத்தை மட்டும் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், எம்.எச் 370 விமானத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்று தேடுதலில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.  இதைத் தொடர்ந்து  விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம், அந்த விமானத்தைத்  தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும்  என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories