4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!

Published:

mh370 - 2026நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தைத் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2014 மார்ச் மாதம் 8-ஆம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்குக்குப் புறப்பட்ட  எம்.எச்-370 விமானம்,  புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து  சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டன. ஆனால், அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவரவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சிக்னல்கள் ஏதும் பெறப் படாததால், விமானத்தைக் கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் எம்.எச்-370 விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என இரு வருடங்களுக்கு முன்னர் கூறப் பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அந்த விமானத்தின் இறக்கைகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், விமானத்தை மட்டும் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், எம்.எச் 370 விமானத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்று தேடுதலில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.  இதைத் தொடர்ந்து  விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம், அந்த விமானத்தைத்  தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும்  என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img