December 5, 2025, 3:24 PM
27.9 C
Chennai

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் இன்று சந்திப்பு

10 June11 trump kim 1 - 202560 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கிம்-ஜோங்-உன், ஏர்சீனா விமானத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு வழக்கமான மாவோ கோட் அணிந்து, தனித்துவமாக சிகை அலங்காரத்துடன் வந்திறங்கினார். 2011 ஆம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், சீனா தவிர்த்து முதன்முறையாக அவர் வெளிநாடு வந்துள்ளார். அவரைச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார். கிம்மின் சகோதரி கிம்ஜோ ஜாங்கும் அப்போது உடன் இருந்தார். வந்த உடனேயே கிம்-ஜோங்-உன், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கைச் சந்தித்துப் பேசினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூரின் பயா லேபர் ராணுவ விமான நிலையத்தில் நேற்று இரவு வந்திறங்கினார். அவருடன் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஜான் கெல்லி, சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் வந்தனர். அவர்களைச் சிங்கப்பூர் அதிகாரிகள் வரவேற்றுத் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

1950 – 53 காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின் எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா – அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வடகொரிய தலைவருடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேச்சு நடத்த உள்ளார். கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவச் செய்தல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை இந்தப் பேச்சின் கருப்பொருட்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புக்கு முன் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிரம்ப் – கிம் சந்திப்புக்காக சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories