இந்தோனேசியாவில் 7.5 அளவில் நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி: சுமார் 400 பேர் உயிரிழப்பு

earch quack indonesia1 - 2026

இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று பிற்பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. பலு நகரில் கடல் பல அடி தொலைவுக்கு உள்வாங்கியது. சற்று உயரமான இடங்களில் இருந்தவர்கள் கடல் நீர் உள்வாங்குவதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 10 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் மேலெழும்பின. இந்த சுனாமி பேரலை கடலோரப் பகுதிகளைத் தாக்கி ஊருக்குள் புகுந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்து பலர் மாயமாகினர். அவர்களை சுனாமி பேரலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையால், சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப் படுகிறது. கடலோரப் பகுதிகளில் பலரது உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories