December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்தில் ஓடுகிறது… ஹைட்ரஜன் ரயில்!

GettyImages hydrogen train - 2025

ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைட்ரஜன் ரயில், செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து ஓடத் தொடங்கியிருக்கிறது. காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் டீசல் ரயில்களுக்கு மாற்றாக, கார்பன் இல்லாத வகையில், சுற்றுச் சூழலுக்கியைந்த வகையில்,  போக்குவரத்தை உருவாக்கும் முயற்சி இது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிவேக டிஜிவி ரயில்களைத் தயாரிக்கும் அல்ஸ்டாம் நிறுவனம்தான் இந்த கொராடியா ஐலிண்ட் ஹைட்ரஜன் ரயில்களையும் உருவாக்கியுள்ளது. 100 கி.மீ. பாதையில் ஓடி வடக்கு ஜெர்மனியில் உள்ள நகரங்களை இந்த நீல நிற ரயில்கள் இணைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. “உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த ரயில்களின் சிறப்பு, இவற்றில் இருந்து கார்பன் வெளியீடு முற்றிலும் இல்லை என்பதே!

இது குறித்து தகவல் தெரிவித்த அல்ஸ்டாம் சிஇஓ ஹென்றி போபார்ட் லபார்க், வரும் 2021ஆம் ஆண்டுக்குள் மேலும் 14 ரயில்களை கீழ்சாக்ஸனி மாநிலத்திற்குத் தர இருக்கிறோம்” என்றார்!

ஜெர்மனியின் பிற மாநிலங்களும் ஹைட்ரஜன் ரயில்களுக்கு மாறப் போவதாக அறிவித்துள்ளன. ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் ரயில்களில் பொருத்தப் பட்டுள்ளன. நீரும் நீராவியும் மட்டுமே இந்த செல்களிலிருந்து வெளியேறும். இயங்குவதற்கு தேவையான சக்தி போக மீதமுள்ள உபரி சக்தி, அயான் லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கப்படும்.

ஒரு டப் ஹைட்ரஜனைக் கொண்டு சுமார் 1000 கி.மீ. வரை இந்த கொராடியா ஐல்ண்ட் ரயில்கள் ஓடும். டீசல் ரயில்களின் ஆற்றலும் ஏறக்குறைய இதே அளவுதான்.
காற்று மண்டல மாசுபடுதலை தவிர்க்க ஜெர்மானிய நகரங்கள் பலவும் இப்போது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதை மக்கள் வரவேற்கின்றனர்.

ஹைட்ரஜன் ரயில் எஞ்சினின் விலை டீசல் எஞ்சினின் விலையைவிட அதிகம்! ஆயினும் ரயிலை ஓடவைத்து பராமரிக்கும் செலவு டீசல் எஞ்சினை விடக் குறைவுதான்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories