இந்தியாவுக்கு எதிராக யாரும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்: பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப்

Published:

இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் ‘த நேஷன்’ வெளியிட்டுள்ள செய்தியில்…

இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று தில்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ளார் நவாஸ் ஷெரீப். இருப்பினும் இந்திய அரசின் கொள்கை அது இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.

அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலகப் பொருளாதார மன்ற மாநாட்டின் போது நரேந்திர மோடி- நவாஸ் ஷெரீப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.
-இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img