December 5, 2025, 4:02 PM
27.9 C
Chennai

இலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது!

srilanka supreme court colombo - 2025

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபட்சவை புதிய பிரதமராக நியமித்தார் மைத்ரீபால சிறீசேன. பின்னர், கடந்த மாதம் 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகக் கூறினார். பின்னர், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதிபரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட 13 பேர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நவ.13ஆம் தேதி இடைக்கால தீர்ப்பாக, நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

இந்த அமர்வின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறினர். மேலும், அதிபர், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நாடாளுமன்றக் கலைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க மூன்றில் இரு பங்கு எம்.பிகளின் ஆதரவு தேவை என்ற சட்ட விதியினை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இலங்கை அதிபரின் செயல் சட்ட விரோதமானது என்று கூறினர்.

நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று ஒருமித்த கருத்தாகக் கூறினர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories