March 19, 2025, 1:40 AM
28.5 C
Chennai

இலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபட்சவை புதிய பிரதமராக நியமித்தார் மைத்ரீபால சிறீசேன. பின்னர், கடந்த மாதம் 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகக் கூறினார். பின்னர், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதிபரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட 13 பேர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நவ.13ஆம் தேதி இடைக்கால தீர்ப்பாக, நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

இந்த அமர்வின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறினர். மேலும், அதிபர், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நாடாளுமன்றக் கலைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க மூன்றில் இரு பங்கு எம்.பிகளின் ஆதரவு தேவை என்ற சட்ட விதியினை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இலங்கை அதிபரின் செயல் சட்ட விரோதமானது என்று கூறினர்.

நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று ஒருமித்த கருத்தாகக் கூறினர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Topics

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories