இலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது!

srilanka supreme court colombo - 2026

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபட்சவை புதிய பிரதமராக நியமித்தார் மைத்ரீபால சிறீசேன. பின்னர், கடந்த மாதம் 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகக் கூறினார். பின்னர், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதிபரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட 13 பேர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நவ.13ஆம் தேதி இடைக்கால தீர்ப்பாக, நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

இந்த அமர்வின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறினர். மேலும், அதிபர், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நாடாளுமன்றக் கலைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க மூன்றில் இரு பங்கு எம்.பிகளின் ஆதரவு தேவை என்ற சட்ட விதியினை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இலங்கை அதிபரின் செயல் சட்ட விரோதமானது என்று கூறினர்.

நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று ஒருமித்த கருத்தாகக் கூறினர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories