இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இஸ்லாமியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
சி.என்.என். நியூஸ் 18 வெளியிட்ட செய்தியின் படி, ஜஹரன் ஹாசிம், அபு மொஹம்மத் என இரு இஸ்லாமியர்கள் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நடைபெறும் நேரத்தில், இலங்கையில் இன்று காலை 3 சர்ச்சுகள் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் காலை 8.45 மணி அளவில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. கொச்சக்கடை, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது.
இதில் 130 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த 9 பேர் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பினை ஷக்ரான் ஹஸீம், அபு மொஹம்மது என்ற இருவர் நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது… என்று கூறியுள்ளது.