
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
மிதுனம்
இதுவரையிலும் விரைய குருவாக இருந்த குரு பகவான் இனி வரும் 11-05-2025 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்கிறார். கடந்த காலத்தில் தேவையற்ற பல செலவுகள் வந்து சிரமத்தில் இருந்தீர்கள் இனி ஜென்ம குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும்.
ஜென்ம குருவாக வந்து உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் துரிதமாக செயல்படும் விதம் புதிய விடயங்களை பற்றி தெரிந்து கொள்தல் எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு குறிப்பெடுத்துக்கொண்டு செயல்படுதல் நல்லது. ஞாபக மறதிகள் வரும் என்பதால் நினைவுபடுத்தி கொள்வது நல்லது.
உங்களின் களத்திரஸ்தானத்தை பார்வை இடுவது திருமண காரியங்கள் பேசுதல், திருமணம் நடத்தல் வேறு சுபகாரியங்கள் வீட்டில் நடத்துதல் போன்ற காரியம் நடக்கும். மன அழுத்தம் அதிகமாக வரும் போது சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 08-06-2025 முதல் 08-07-2025 வரை குரு அஸ்தமானமாகும். காலம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.
உங்களின் பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரை சென்றுவருதல். கோவில் காரியங்களில் முன்னின்று நடத்துதல். நற்காரியங்களும் உதவிகள் செய்தல் போன்ற செயல் நன்றாக நடக்கும். குரு பார்க்கும் இடம் சிறப்பாக இருக்கும். என்பதால் உங்களின் அனைத்து காரியங்களும் வளம் பெறும். குடும்ப சூழ்நிலைகளை மறந்து ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்து கொண்டு அதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவீர்கள். புதிதாக ஆன்மீக குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது கடன் பிரச்சனை நீண்டகால தீராத விடயங்கள் அனைத்து தீர்ந்து சுபிட்சம் பெறுவீர்கள். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.
குரு பகவான் பார்வை பலன்கள்:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் கொண்டை கடலையில் மாலை கட்டி போட்டு வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.




