December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மகரம்

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

மகரம்:
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய)
  75/100

உங்கள் ராசிக்கு ராகு 5ல் வருவது நல்லதல்ல அதே நேரம் கேது 11ல் சஞ்சரிப்பது நல்ல பலனை தரும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பெரியோர் ஆசீர்வாதங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ராகு நீசம் பெறுவதால் ராகுவால் கெடுதல் விளையாது. மேலும் செவ்வாய் சுகஸ்தானத்தில் ஆட்சி அதன் நக்ஷத்திர காலில் ராகு இது நிம்மதியை நிறைய தரும். மேலும் ராசிநாதன் ஆட்சி, குருவும் ராசியில் நீசம் ஆனால் பார்வையால் நன்மை, கெடுதல்கள் அகலும். 7க்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் ராகு பயணிக்கும்போது அளப்பறிய நன்மை உண்டாகும். சகல துறையினருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்ற கிரஹங்களில் சுக்ரன் சூரியன், செவ்வாய் சஞ்சாரங்கள் அதிக நன்மை தருகின்றன.

குடும்பம் & பொருளாதாரம் : கேதுவும் குருவும் நல்ல நிலையை உண்டாக்குகின்றனர். சுக்ரன் சஞ்சாரம் இல்லத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், சிலருக்கு குழந்தை பாக்கியம் என்று இருக்கும் பணப்புழக்கம் தாராளம், லாபாதிபதி செவ்வாய் 4ல் பொருளாதாரம் நன்றாக இருக்கும் கடன் தொல்லை நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை குடும்ப தேவைகள் பூர்த்தியாகுதல், புதிய வீடு வாகன யோகங்கள் என்று நன்றாகவே இருக்கும். ராகு 27.01.2022 முதல் 05.10.2021 வரையில் நல்ல நிலை இருக்கும். அதன் பின் பெரிய பாதிப்புகள் இருக்காது அதனால் கவலைப்பட வேண்டாம்.

உடல் ஆரோக்கியம் : 6க்குடைய புதனின் நக்ஷத்திரத்தில் கேது 02.06.2021 வரை வியாதிகளை தராது. ஆனால் புதன் வாயு தொந்தரவு செரிமான கோளாறுகள் என்று சிறு வைத்திய செலவை வைக்கும். 7க்குடைய சந்திரனின் சஞ்சாரம் நன்றாக இருந்தாலும் அவ்வப்போது வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியத்திலும் 9க்குடைய புதன் சஞ்சாரம் பெற்றோர் மூலமும் வைத்திய செலவை சிறு அளவில் வைக்கும். தியான பயிற்சி உடல்பயிற்ச்சி ஆகார கட்டுப்பாடு போன்றவை இதை குறைக்கும். 02.06.2021க்கு பின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினருக்கும்): எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு வெளிநாட்டு வேலை, புதிய உத்தியோகம் என்று கிடைத்து மகிழ்ச்சி அதிகம் ஆகும். மேலும் 27.01.2021 – 05.10.2021 வரையிலான கால கட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக இருக்கும் உயர்ந்த பதவி, பொருளாதார தேவைகள் பூர்த்தியாகுதல் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல், பெண் ஊழியர்களுக்கு விரும்பிய வகையில் வேலையில் முன்னேற்றம் நல்ல பெயர் என்று இருக்கும். பொதுவாக இந்த பெயர்ச்சி முழுவதுமே உத்தியோகத்தில் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இது மேலும் சந்தோஷத்தை தரும்.

சொந்த தொழில்(அனைத்து தொழில் செய்வோருக்கும்) : புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் தங்கள் முயற்சி நிறைவேறும். சொந்த தொழில் செய்வோர் அனைவருக்கும் பணம், செல்வம் செல்வாக்கு இவை உயரும். சமூக அந்தஸ்து உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவங்கள் நல்ல வளர்ச்சி பெறும். கலை தொழில், அரசியல் விவசாயம் என்று அனைவருக்கும் நன்மைகளே அதிகம் நடக்கும் அதிலும் 27.01.2021 – 05.10.2021ல் பெரிய நன்மைகள் இருக்கும் எதிர்ப்புகள் குறையும். விற்பனை அதிகம் இருக்கும். மேலும் புதிய வாய்ப்புகளால் பண வரவு தாராளமாக இருக்கும் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியில் அனைத்து கிரஹங்களும் அதிக சாதகத்தை தருவதால் வெற்றிகள் அதிகம்.

மாணவர்கள் : படிப்பில் உற்ச்சாகம் ஏற்படும். விரும்பிய பாடம், கல்லூரி கிடைக்கும், மருத்துவம், ரசாயணம், ஓட்டல் மேனேஜ்மெண்ட் தாவர இயல் ஆராய்ச்சி படிப்புகள் விவசாய படிப்பு இந்த மாணவர்களுக்கு முன்னேற்றம் நன்றாக இருக்கும் மதிப்பெண்கள் நன்றாக கிடைக்கும் படிப்பில் சிறந்து விளங்குவர் தடைகள் ஏதும் இருக்காது. போட்டி பந்தயங்களிலும் வெற்றி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். இருந்தாலும் உடல் நலத்தில் அக்கறை கொள்வது குறிப்பாக ஆகார கட்டுப்படு அவசியம் வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். கவனம் தேவை.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories