Author: Gobi Kannan

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு;  5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைக்காக 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை; பேத்தி உள்பட 4 பேர் கைது….!

இரண்டரை பவுண் தங்க நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்று உடலை பெட்ரேல் ஊற்றி எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக மூதாட்டியின் பேத்தி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் 2 பேர் பலி 16 பேர் படுகாயம்…!

இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் இஸ்லாமியா்கள் மசூதிகளில் இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

திராவிடம் இன்னும் உயிர் துடிப்புடன்தான் இருக்கிறது்; கனிமொழி!

தமிழகம், கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது திராவிடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது. அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?

தமிழகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- 2026

இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை முயற்சி…!

மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கட்டாய திருமணம் புதுப்பெண் தற்கொலை….!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது உடன் பிறந்த அக்காவின் மகளான நதியாவுடன் (வயது 20) சசிகுமாருக்கு திருமணம் நடந்துள்ளது.

ஒரே நாளில் நடந்த இரு சாலை விபத்துகள்; 3 பேர் பரிதாபமாக உயிரழப்பு….!

மோட்டர சைக்கிள் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் வந்தபோது அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோட்டர் சைக்கிள் ஏறி இறங்கியது இதில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சந்திரா நிலைதடுமாறி துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்

ரூ.50 லட்சம் மதிப்பலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்;  கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு…!

பொன்னேரி அடுத்த சோழவரம் மசூதி தெருவில் வசித்து வரும் நாகராஜ். இவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் படி சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தவீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குமேல் குழந்தைகளை அதிகமாக ஏற்றக் கூடாது….!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த விட்ட நிலையில் பள்ளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் மாணவ, மாணவியா்களின் பாதுகாப்பு அளித்திடும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரங்கள் போன்றவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன
- 2026

Recent articles

spot_img