நகைக்காக 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை; பேத்தி உள்பட 4 பேர் கைது….!

vettu - 2026

திருவாரூர் மன்னார்குடியில் மூதாட்டி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டரை பவுண் தங்க நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்று உடலை பெட்ரேல் ஊற்றி எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக மூதாட்டியின் பேத்தி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் வீதியின் அருகே கருவேலமர புதருக்குள் மூதாட்டி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை செய்தனா்.

விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் இரண்டரை பவுண் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த கொடூரம் வெளியானது.

தஞ்சை மாவட்டம் மதுக்கூரையடுத்து, புனவஞ்சிக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் வயது 70 இவர் கடந்த 18 ஆம் தேதி மன்னார்குடி மதுக்கூர் வீதியிலுள்ள தனது பேத்தி சுமதி வயது 20 வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின் அவரின் சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை.

இந் நிலையிலேயே அவர் கருவேலங்காட்டு புதருக்குள் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இறந்த மூதாட்டி மாரியம்மாளின் பேத்தி சுமதியின் கணவர் ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் சிவக்குமார், பெரியசாமி ஆகியோர் மோட்டார் சைக்களில் மூதாட்டி மாரியம்மாளை கருவேலங்காட்டு பகுதிக்கு அழைத்து வந்து அங்கு வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் அவரது கழுத்திலுந்த இரண்டரை பவுண் சங்கிலியை எடுத்துவிட்டு, பனை ஓலைகள் மற்றும் பெட்ரோல் ஊற்றி மாரியம்மாளின் உடலை எரித்துள்ளனர். இந்தக் கொலைக்கு மாரியம்மாளின் பேத்தி சுமதியும் உடந்தையாக இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுமதி உட்பட நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories