spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ராமானுஜ நூற்றந்தாதி

ராமானுஜ நூற்றந்தாதி

- Advertisement -

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி

ஸ்ரீ:

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி

தனியன்கள்

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொனங்கழற்கமலப் போதிரண்டும், – என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு,
என்னுக்கடவுடையேன் யான்! 1

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திரவரங்கத்தமுது ஓங்கும், அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!. 2

சொல்லின் தொகைகொண்டுஉனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே,
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே. 3

பாசுரங்கள் தொடக்கம்:

பூமன்னுமாது பொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னு மாறன், அடிபணிந்துய்ந்தவன் ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்த இராமாநுசன்,
சரணாரவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே. 1

ழூகள்ளார்பொழில் தென்னரங்கன், கமலப்பதங்கள்
நெஞ்சிற் கொள்ளா, மனிசரை நீங்கிக் ஃ
குறையல்பிரானடிக்கீழ் விள்ளாத அன்;பன் இராமாநுசன்,
மிக்கசீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு,
ஒன்றறியேன் எனக்குற்றபேரியல்வே 2

பேரியல்நெஞ்சே!, அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
ப10ரியரோடுள்ளசுற்றம் புலர்த்திப் ஃ
பொருவருஞ்சீர் ஆரியன்செம்மை
இராமானுசமுனிக்கன்பு செய்யும், சீரியபேறுடையார்,
அடிக்கீழென்னைச்சேர்த்ததற்கே. 3

என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேறறுத்து, ஃ
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன்,
பரன்பாதமுமென் சென்னித்தரிக்கவைத்தான்,
எனக்கேதும் சிதைவில்லையே. 4

எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று, இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் ஃ
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் அவன்
திருநாமங்கள் சாற்றுமென்பா, இனக்குற்றம்
காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5

இயலும் பொருளும் இசையத்தொடுத்து, ஈன்கவிகளன்பால்
மயல்கொண்டுவாழ்த்தும் இராமானுசனை ஃ
மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில்லாத
என்பாவிநெஞசால், முயல்கின்றனன்,
அவன்றன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே 6

ழூமொழியைக் கடக்கும் பெரும்புகழான்,
வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும்,
நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின் ஃ
பழியைக்கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி,
அல்லா வழியைக்கடத்தல்,
எனக்கினியாதும்வருத்தமன்றே 7

வருத்தும் புறவிருள் மாற்ற, எம்பொய்கைப்பிரான்
மறையின் குருத்தின் பொருளையும்,
செந்தமிழ் தன்னையும்கூட்டி ஃ
ஒன்றத் திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே, இருத்தும்பரமன்,
இராமானுசனெம் இறையவனே. 8

இறைவனைக் காணும் இதயத்திருள்கெட,
ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய,
பூதத்திருவடித்தாள்கள் ஃ
நெஞ்சத்துறையவைத்தாளும் இராமானுசன்
புகழ்ஓதும் நல்லோர், மறையினைக்காத்து,
இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே. 9

மன்னியபேரிருள் மாண்டபின், கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக், கண்டமைகாட்டும் ஃ
தமிழ்த்தலைவன் பொன்னடிபோற்றும்
இராமானுசற்கன்புபூண்டவர் தாள்,
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே. 10
சீரியநான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப்பாண்பெருமாள் ஃ
சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்றன்னைச்
சார்ந்தவர்தம், காரியவண்மை,
என்னால் சொல்லொணாதிக்கடலிடத்தே 11

இடங்கொண்டகீர்த்தி மழிசைக்கிறைவன்,
இணையடிப்போதடங்கும் இதயத்திராமானுசன் ஃ
அம்பொற்பாதமென்றும் கடங்கொண்டிறைஞ்சும்
திருமுனிவர்க்கன்றிக்காதல் செய்யாத், 12
திடங்கொண்டஞானியர்க்கே, அடியேனன்பு செய்வதுவே
செய்யும் பசுந்தளபத் தொழில்மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ்மாலையும் ஃ
பேராத சீரரங்கத்தையன் கழற்கணியும் பரன்தாளன்றி,
ஆதரியாமெய்யன்,
இராமானுசன் சரணேகதிவேறெனக்கே. 13

கதிக்குப்பதறி, வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத், தவம்செய்யும்கொள்கையற்றேன், ஃ
கொல்லிகாவலன் சொல் பதிக்கும் கலைக்கவிபாடும்
பெரியவர் பாதங்களே, துதிக்கும்பரமன்,
இராமானுசனென்னைச் சோர்விலனே. 14

சோராதகாதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலையொன்றும்
பாராதவனை, பல்லாண்டென்று காப்பிடும் ஃ
பான்மையன்தாள் பேராதவுள்ளத்திராமானுசன்றன்
பிறங்கியசீர், சாராமனிசரைச் சேரேன்,
எனக்கென்ன தாழ்வினியே? 15

ழூதாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து, தலமுழுதும் கலியே
ஆள்கின்றநாள்வந்து, அளித்தவன்காண்மின், ஃ
அரங்கர்மௌலி சூழ்கின்றமாலையைச் சூடிக்கொடுத்தவள்
தொல்லருளால், வாழ்கின்றவள்ளல்,
இராமானுசனென்னும் மாமுனியே. 16

முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம், கண்ணமங்கை நின்றானைக் ஃ
கலைபரவும் தனியானைத் தண்டமிழ்செய்த
நீலன்றனக்கு, உலகில் இனியானை,
எங்கள் இராமானுசனைவந்து எய்தினரே 17

எய்தற்கரியமறைகளை, ஆயிரம்இன்தமிழால் செய்தற்
குலகில்வரும், சடகோபனைச், ஃ
சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர்சீரை
உயிர்களெல்லாம், உய்தற்குதவும்,
இராமானுசனெம்உறுதுணையே 18

உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும், உயர்குருவும்
வெறிதருபூமகள் நாதனும், ஃ
மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ்
ஆரணமேயென்றிந்நீணிலத்தோர், அறிதரநின்ற,
இராமானுசன் எனக்கு ஆரமுதே. 19

ஆரப்பொழில் தென்குருகைப்பிரான், அமுதத்திருவாய்
ஈரத்தமிழின், இசையுணர்ந்தோர்கட்கு, ஃ
இனியவர்தம் சீரைப்பயின்றுய்யும் சீலங்கொள்
நாதமுனியை, நெஞ்சால் வாரிப்பருகும்,
இராமானுசனென்றன்மாநிதியே. 20

நிதியைப் பொழியும்முகிலென்று, நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் ஃ
இனித்து}ய்நெறிசேர் எதி;கட்கிறைவன் யமுனைத்துறைவன்
இணையடியாம், கதிபெற்றுடைய,
இராமானுசனென்கைக்காத்தனனே. 21

கார்த்திகையானும் கரிமுகத்தானும், கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, ஃ
மூவுலகும் ©த்தவனே! என்றுபோற்றிடவாணன்
பிழைபொறுத்த, தீர்த்தனையேத்தும்,
இராமானுசனென்றன்சேமவைப்பே 22

வைப்பாயவான்பொருளென்று, நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை, ஃ
இருநிலத்தில் ஒப்பார் இலாதஉறுவினையேன்
வஞ்ச நெஞ்சில்வைத்து, முப்போதும்வாழ்த்துவன்,
என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே. 23

மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து,
அதனால் எய்த்தொழிந்தேன், முனநாள்களெல்லாம்,ஃ
இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம்
போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக், 24
கைத்தமெய்ஞ்ஞானத்து, இராமானுசனென்னும்கார்தன்னையே.
காரேய் கருணையிராமாநுச, இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர், நின்னருளின்தன்மை, ஃ
அல்லலுக்கு நேரேயுறைவிடம் நான்வந்து
நீயென்னைஉய்த்தபின், உன் சீரேயுயிர்க்குயிராய்,
அடியேற்கின்றுதித்திக்குமே. 25

திக்குற்ற கீர்த்தியிராமாநுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி, விளங்கியமேகத்தை, ஃ
மேவும்நல்லோர் எக்குற்றவாளர்
எதுபிறப்பேதியல்வாகநின்றோர், அக்குற்றம்அப்பிறப்பு,
அவ்வியல்வேநம்மையாட்கொள்ளுமே 26

கொள்ளக்குறைவற்றிலங்கிக், கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல் தனத்தினால், வல்வினையேன் மனம்
நீ புகுந்தாய் ஃ வெள்ளைச்சுடர்விடும்உன்பெருமேன்மைக்கு இழுக்கிதென்று, தள்ளுற் றிரங்கும்,
இராமானுச! என்தனிநெஞ்சமே! 27

நெஞ்சில்கறைகொண்ட கஞ்சனைக்காய்ந்தநிமலன், நங்கள்
பஞ்சித்திருவடி, பின்னைதன்காதலன், ஃ
பாதம் நண்ணா வஞ்சர்க்கரிய இராமானுசன்புகழ்
அன்றியென்வாய், கொஞ்சிப்பரவகில்லாது,
என்னவாழ்வின்றுகூடியதே! 28

கூட்டும் விதியென்றுகூடுங்கொலோ, தென்குருகைப்பிரான்
பாட்டென்னும்,வேதப்பசுந்தமிழ்தன்னைத், ஃ
தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமானுசன்
புகழ்மெய்யுணர்ந்தோர், ஈட்டங்கள்தன்னை,
என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே. 29

இன்பம்தருபெருவீடுவந்தெய்திலென்? எண்ணிற்த
துன்பந்தரு நிரயம்பலசூழிலென்? ஃ
தொல்லுலகில் மன்பல்லுயிர்கட்கிறையவன்
மாயன்எனமொழிந்த, அன்பன் அனகன்,
இராமானுசனென்னை ஆண்டனனே. 30

ழூஆண்டுகள் நாள் திங்களாய், நிகழ்காலமெல்லாம்மனமே!
ஈண்டு, பல்யோனிகள்தோறுழல்வோம், ஃ
இன்றோரெண்ணின்றியே காண்டகுதோளண்ணல்
தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப், ப10ண்டவன்பாளன்,
இராமானுசனைப்பொருந்தினமே. 31

பொருந்தியதேசும் பொறையும் திறலும்புகழும், நல்ல
திருந்தியஞானமும், செல்வமும் சேரும் ஃ
செருகலியால் வருந்தியஞாலத்தை,
வண்மையினால்வந்தெடுத்தளித்த அருந்தவன்,
எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே. 32

அடையார் கமலத்தலர்மகள் கேள்வன், கையாழியென்னும்
படையோடுநாந்தகமும் படர்தண்டும் ஃ
ஒண்சார்ங்கவில்லும் புடையார்புரிசங்கமுமிந்தப்
பூதலம்காப்பதற்கு, என்னிடையே,
இராமானுசமுனியாயின இந்நிலத்தே 33

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை, நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும், பிறங்கியதில்லை, ஃ
என்பெய்வினைதென் புலத்தில்பொறித்த வப்புத்தகச்சும்மை
பொறுக்கியபின், நலத்தைப்பொறுத்தது,
இராமானுசன்றன் நயப்புகழே 34

நயவேனொருதெய்வம்நானிலத்தே, சிலமானிடத்தைப்
புயலேஎன, கவிபோற்றிசெய்யேன், ஃ
பொன்னரங்கமென்னில் மயலேபெருகும் இராமானுசன்,
மன்னுமாமலர்த்தாள் அயரேன்,
அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே? 35

அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன், அன்றாரண்ச்சொல்
கடல்கொண்டஒண்பொருள் கண்டளிப்பப், ஃ
பின்னும் காசினியோர் இடரின்கண்வீழ்ந்திடத் தானும்
அவ்வொண்பொருள்கொண்டு, அவர்பின்படரும்குணன்,
எம்இராமானுசன்றன் படியிதுவே 36

படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்திவெள்ளம்,
குடிகொண்டகோயில், இராமானுசன்குணங்கூறும், ஃ
அன்பர் கடிகொண்டமாமலர்த்தாள் கலந்துள்ளங்கனியும்
நல்லோர், அடிகண்டுகொண்டுகந்து,
என்னையும் ஆளவர்க்காக்கினரே. 37

ஆக்கியடிமை நிலைப்பித்தனை, யென்னை இன்றவமே
போக்கிப்புறத்திட்டது என்பொருளாமுன்பு, ஃ
புண்ணியர்தம் வாக்கிற்பிரியா இராமானுச!
நின்அருளின்வண்ணம், நோக்கில்தெரிவரிதால்,
உரையாயிந்தநுண்பொருளே. 38

பொருளும் புதல்வரும்பூமியும், ப10ங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும், நமக்குநெஞ்சே! ஃ
மற்றுளார்தரமோ? இருள்கொண்டவெந்துயர்
மாற்றித்தன்ஈறில்பெரும்புகழே, தெருளும்தெருள்தந்து,
இராமானுசன்செய்யும் சேமங்களே. 39

சேமநல்வீடும் பொருளும் தருமமும்,
சீரியநற்காமமும் என்றிவைநான்கென்பர், ஃ
நான்கினும் கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள்
வீடிதற்கென்றுரைத்தான், வாமனன்சீலன்,
இராமானுசனிந்தமண்மிசையே 40

மண்மிசையோனிகள் தோறும்பிறந்து, எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா, ஃ
உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன்வந்து தோன்றியஅப்பொழுதே, நண்ணருஞானம்
தலைக்கொண்டு, நாரணற்காயினரே. 41

ஆயிழையார்கொங்கைதங்கும் – அக்காதல்அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை, வந்தெடுத்தானின்று, ஃ
மாமலராள் நாயகன் எல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் தூயவன்,
தீதில் இராமானுசன் தொல்லருள்சுரந்தே. 42

சுரக்கும் திருவும்உணர்வும், சொலப்புகில்வாயமுதம்
பரக்கும், இருவினைபற்றறவோடும், ஃ
படியிலுள்ளீர்! உரைக்கின்றனனுமக்கு
யானறஞ்சீறும் உறுகலியைத்,துரக்கும்பெருமை,
இராமானுசனென்று சொல்லுமினே. 43

சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள்நான்குமெல்லை
இல்லா, அறநெறியாவும்தெரிந்தவன், ஃ
எண்ணருஞ்சீர்நல்லார்பரவும் இராமானுசன்
திருநாமம்நம்பிக்கு அல்லார் அகலிடத்தோர்,
எதுபேறென்றுகாமிப்பரே. 44

பேறொன்றுமற்றில்லைநின்சரண்அன்றி, அப்பேறளித்தற்
காறொன்றுமில்லை, மற்றைச்சரண்அன்றி, ஃ
என்றிப்பொருளைத் தேறுமவர்க்கும் எனக்கும்
உனைத்தந்தசெம்மை சொல்லால், கூறும்பரம்மன்று,
இராமானுச! மெய்ம்மைகூறிடிலே. 45

கூறுஞ்சமயங்கள் ஆறும்குலையக், குவலயத்தே
மாறன்பணித்த, மறையுணர்ந்தோனை, ஃ
மதியிலியேன் தேறும்படியென்மனம் புகுந்தானைத்,
திசையனைத்தும் ஏறும்குணனை,
இராமானுசனை இறைஞ்சினமே. 46

இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத்-
தறம்செப்பும், அண்ணல் இராமானுசன், ஃ
என்அருவினையின் திறம்செற்றிரவும்பகலும் விடாதென்றன்
சிந்தையுள்ளே, நிறைந்தொப்பறவிருந்தான்,
எனக்காரும்நிகரில்லையே! 47

நிகரின்றி நின்றவென்நீசதைக்கு, நின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை, அருட்குமஃதேபுகல், ஃ
புன்மையிலோர் பகரும்பெருமைஇராமானுச!
இனிநாம்பழுதே, அகலும்பொருளென்,
பயனிருவோமுக்குமானபின்னே? 48

ஆனது செம்மையறநெறி, பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி, இறந்ததுவெங்கலி, ஃ
பூங்கமலத் தேநதிபாய்வயல் தென்னரங்கன்
கழல் சென்னிவைத்துக், தானத்தில்மன்னும்,
இராமானுசனித்தலத்துதித்தே. 49

உதிப்பனவுத்தமர்சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட, மாறிநடப்பன, ஃ
கொள்ளைவன்குற்றமெல்லாம் பதித்தவென்புன்கவிப்பாவினம்
பூண்டனபாவுதொல்சீர், எதித்தலைநாதன்,
இராமனுசன்றன் இணையடியே. 50

அடியைத் தொடர்ந்தெழும்ஐவர்கட்காய், அன்றுபாரதப்போர்
முடியப், பரிநெடுந்தேர்விடுங்கோனை, ஃ
முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் இராமானுசன்
என்னைஆளவந்து, இப்படியிற்பிறந்தது,
மற்றில்லைகாரணம்பார்த்திடிலே. 51

பார்தானறுசமயங்கள்பதைப்ப,
இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு,
புன்மையினேனிடைத்தான்புகுந்து ஃ
தீர்த்தானிருவினை தீர்த்து,
அரங்கன்செய்யதாளிணையோடார்த்தான்,
இவையென் இராமானுசன்செய்யும் அற்புதமே. 52

அற்புதன் செம்மை இராமானுசன், என்னைஆளவந்த
கற்பகம்கற்றவர், காமுறுசீலன், ஃ
கருதரிய பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும்
பரனதென்னும், நற்பொருள்தன்னை,
இந்நானிலத்தேவந்துநாட்டினனே. 53

நாட்டியநீசச்சமயங்கள்மாண்ட்ன,
நாரணனைக் காட்டியவேதம்களிப்புற்றது, ஃ
தென்குருகைவள்ளல் வாட்டமிலாவண்டமிழ்மறை
வாழ்ந்தது, மண்ணுலகில் ஈட்டியசீலத்து,
இராமானுசன்றன் இயல்வுகண்டே. 54

கண்டவர் சிந்தைகவரும், கடிபொழில்தென்னரங்கன்,
தொண்டர்குலாவும் இராமானுசனைத், ஃ
தொகையிறந்த பண்தருவேதங்கள் பார்மேல்நிலவிடப் பார்த்தருளும், கொண்டலைமேவித்தொழும்,
குடியாமெங்கள் கோக்குடியே. 55

கோக்குலமன்னரைமூவெழுகால், ஒருகூர்மழுவால்
போக்கியதேவனைப், போற்றும்புனிதன், ஃ
புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமானுசனை
அடைந்தபின், என் வாக்குரையாது,
என்மனம் நினையாதினி மற்றொன்றையே. 56

மற்றொரு பேறுமதியாது, அரங்கன்மலரடிக்காள்உற்றவரே, தனக்குற்றவராக்கொள்ளும் உத்தமனை, ஃ
நற்றவர் போற்றுமிராமாநுசனை,
இந்நானிலத்தே பெற்றனன்,
பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே. 57

பேதையர்வேதப்பொருளிதென்றுன்னிப், பிரமம்நன்றென்றோதி
மற்றெல்லாஉயிரும் அஃதென்று, ஃ
உயிர்கள் மெய்விட்டு ஆதிப் பரனொடொன்றாமென்று
சொல்லுமவ்வல்லலெல்லாம்,
வாதில்வென்றான், எம்இராமானுசன் மெய்மமதிக்கடலே. 58

கடலளவாயதிசையெட்டினுள்ளும், கலியிருளே
மிடைதருகாலத்திராமானுசன், ஃ
மிக்கநான்மறையின் சுடரொளியாலவ்விருளைத்
துரந்திலனேல், உயிரை உடையவன்,
நாரணன்என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே. 59

உணர்ந்தமெய்ஞ்ஞானியர்யோகந்தொறும், திருவாய்மொழியின்
மணந்தரும், இன்னிசைமன்னும் இடந்தொறும், ஃ
மாமலராள் புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும்
பரிதொறும் புக்குநிற்கும், குணந்திகழ்கொண்டல்,
இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60

கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால்,
நிரயத்தழுந்தியிட்டேனை, வந்தாட்கொண்டபின்னும்,ஃ
அருமுனிவர் தொழுந்தவத்தோனெம்இராமானுசன்
தொல்புகழ், சுடர்மிக்கெழுந்தது
அத்தால் நல்லதிசயங்கண்ட திருநிலமே. 61

இருந்தேனிருவினைப்பாசம்கழற்றி, இன்றியான்
இறையும் வருந்தேன், இனியெம்இராமானுசன், ஃ
மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்
புன்மையினோர்க்கு ஒன்றும்நன்மைசெய்யாப்,
பெருந்தேவரைப்பரவும், பெரியோர் தம்கழல்பிடித்தே. 62

பிடியைத்தொடரும்களிறென்ன, யானுன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும், ஃ
அறுசமயச் செடியைத் தொடரும் அருள்செறிந்தோர்
சிதைந்தோடவந்து இப்படியைத்தொடரும்,
இராமானுச! மிக்கபண்டிதனே. 63

பண்டருமாறன்பசுந்தமிழ், ஆனந்தப்பாய்மதமாய்
விண்டிட, எங்கள் இராமானுசமுனிவேழம் ஃ
மெய்ம்மைகொண்ட நல்வேதக்கொழுந்தண்டமேந்திக்,
குவலயத்தே மண்டிவந்தேன்றது,
வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே. 64

வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு, என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது, தவம் தாரணிபெற்றது, ஃ
தத்துவ நு}ல் கூழற்றது குற்றமெல்லாம்
பதித்தகுணத்தினர்க்கு, அந்நாழற்றது,
நம்இராமானுசன் தந்தஞானத்திலே. 65

ஞானங்கனிந்தநலங்கொண்டு, நாடொறும்நைபவர்க்கு
வானம்கொடுப்பதுமாதவன், ஃ
வல்வினையேன் மனத்தில் ஈனம்கடிந்தஇராமானுசன்
தன்னைஎய்தினர்க்கு, அத்தானம்கொடுப்பது,
தன்தகவென்னும்சரண்கொடுத்தே. 66

சரணமடைந்ததருமனுக்காப், பண்டுநூற்றுவரை
மரணம் அடைவித்தமாயவன் தன்னை, ஃ
வணங்கவைத்த கரணம்இவையுமக்கன்றென்றிராமானுசன்,
உயிர்கட்(கு) அரணங்கமைத்திலனேல்,
அரணர்மற்றிவ்வாருயிர்க்கே? 67

ஆரெனக்கின்றுநிகர்சொல்லின், மாயனன்றைவர்
தெய்வத் தேரினிற்செப்பியகீதையின், ஃ
செம்மைப்பொருள்தெரியப் பாரினிற்சொன்ன
இராமானுசனைப் பணியும்நல்லோர்,
சீரினிற்சென்றுபணிந்தது, என்னாவியும்சிந்தையுமே. 68

சிந்தையினொடுகரணங்கள்யாவும்சிதைந்து,
முன்னாள் அந்தமுற்றாழ்ந்ததுகண்டு, ஃ
அவைஎன்றனக்கன்றருளால் தந்தஅரங்கனும்
தன்சரண்தந்திலன், தானதுதந்து, எந்தைஇராமானுசன்
வந்தெடுத்தனன் இன்றென்னையே. 69

என்னையம் பார்த்தென்இயல்வையும்பார்த்து, எண்ணில்
பல்குணத்த உன்னையும் பார்க்கில்,
அருள்செய்வதேநலம், ஃ அன்றியென்பால் பின்னையும்
பார்க்கில்நலமுளதே? உன்பெருங்கருணை, தன்னை யென்பார்ப்பர், இராமானுச! உன்னைச்சார்ந்தவரே. 70

சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக்கீழ், அன்புதான்மிகவும்
கூர்ந்தது, அத்தாமரைத்தாள்களுக்கு, ஃ
உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென்செய்கை
முன்செய்வினை நீசெய்வினையே, அதனால்பேர்ந்தது,
வண்மைஇராமானுச! எம்பெருந்;தகையே. 71

கைத்தனன் தீயசமயக்கலகரைக்,
காசினிக்கேஉய்த்தனன், தூயமறைநெறிதன்னை, ஃ
என்றுன்னியுள்ளம் நெய்த்தவன்போடிருந்தேத்தும்
நிறைபுகழோருடனே, வைத்தனன்என்னை,
இராமானுசன் மிக்கவண்மைசெய்தே. 72

வண்மையினாலுந்தன்மாதகவாலும், மதிபுரையும்
தண்மையினாலும், இத்தாரணியோர்கட்குத், ஃ
தான்சரணாய் உண்மை நன்ஞானம்உரைத்தஇராமானுசனை,
உன்னும் திண்மையல்லாலெனக்கில்லை,
மற்றோர்நிலைதேர்ந்திடிலே. 73

தேரார் மறையின்திறமென்று, மாயவன்தீயவரைக்
கூராழிகொண்டுகுறைப்பது, ஃ கொண்டலனையவண்மை ஏரார்குணத்தெம்இராமானுசன்.
அவ்வெழில்மறையில் சேராதவரைச்சிதைப்பது,
அப்போதொருசிந்தைசெய்தே. 74

செய்த்தலைச்சங்கம்செழுமுத்தம்ஈனும், திருவரங்கர்
கைத்தலத்தாழியும்சங்கமுமேந்தி, ஃ
நங்கண் முகப்பேமொய்த்தலைத்துன்னைவிடேனென்றிருக்கிலும்,
நின்புகழே மொய்த்தலைக்கும்வந்து,
இராமானுச! என்னைமுற்றுநின்றே. 75

ழூநின்றவண்கீர்த்தியும்நீள்புனலும், நிறைவேங்கடப்பொற்
குன்றமும், வைகுந்தநாடும் குலவியபாற்கடலும்,ஃ
உன்தனக்கெத்தனையின்பந்தரும்
உன்இணைமலர்த்தாள், என்றனக்கும்அது,
இராமானுச! இவையீந்தருளே. 76

ஈந்தனனீயாதஇன்னருள், எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன், அம்மறைப்பல்பொருளால், ஃ
இப்படியனைத்தும் ஏய்ந்தனன்கீர்த்தியினாலென் வினைகளை,
வேர்பறியக் காய்ந்தனன், வண்மை
இராமானுசற்கென்கருத்தினையே? 77

கருத்திற்புகுந்துள்ளிற்கள்ளம்கழற்றிக், கருதரிய
வருத்தத்தினால்மிகவஞ்சித்து, ஃ
நீயிந்தமண்ணகத்தே திருத்தித்திருமகள் கேள்வனுக்கு
ஆக்கியபின், என்னெஞ்சில்பொருத்தப்படாது,
எம்இராமானுச! மற்றோர் பொய்ப்பொருளே. 78

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து, இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன் நிற்க, ஃ
வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்
இங்கியாதென்றுலர்ந்தவமே, ஐயப்படாநிற்பர்,
வையத்துள்ளோர்நல்லறிவிழ்தே. 79

நல்லார் பரவும்இராமநுசன், திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை, மறவாதவர்கள்யவர், ஃ
அவர்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலும்
எத்தொழும்பும், சொல்லால்மனத்தால், கருமத்தினால்,
செய்வன் சோர்வின்றிறே. 80

சோர்வின்றி உன்றன்துணையடிக்கீழ்த், தொண்டுபட்டவர்பால்
சார்வின்றி நின்றஎனக்கு, ஃ
அரங்கன்செய்யதாளிணைகள் பேர்வின்றியின்றுபெறுத்தும்
இராமானுச!, இனியுன் சீரொன்றியகருணைக்கு,
இல்லைமாறுதெரிவுறிலே. 81

தெரிவுற்ற ஞானம்செறியப்பெறாது, வெந்தீவினையால்
உருவற்றஞானத்துழல்கின்றஎன்னை, ஃ
ஒருபொழுதில் பொருவற்றகேள்வியனாக்கிநின்றான்
என்னபுண்ணியனோ!, தெரிவுற்றகீர்த்தி,
இராமானுசனென்னும் சீர்முகிலே. 82

சீர்கொண்டுபேரறம்செய்து, நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர்கூட்டனல்லேன், ஃ
உன்பதயுகமாம் ஏர்கொண்டவீட்டைஎளிதினில்எய்துவன்,
உன்னுடைய கார்கொண்டவண்மை,
இராமானுச! இதுகண்டுகொள்ளே. 83

கண்டுகொண்டேனெம்இராமானுசன்றன்னைக், காண்டலுமே
தொண்டுகொண்டேன், அவன் தொண்டர்பொற்றாளில்,
அவன்சீர் வெள்ளவாரியை, வாய்மடுத்தின்(று) உண்டுகொண்டேன்,
இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே. 84

ஓதியவேதத்தின் உட்பொருளாய், அதன்உச்சிமிக்க
சோதியை, நாதன்எனவறியா துழல்கின்றதொண்டர் ஃ
பேதைமை தீர்த்தவிராமாநுசனைத்தொழும்பெரியோர்,
பாதமல்லாலென்றன் ஆருயிர்க்கு,
யாதொன்றும்பற்றில்லையே. 85

பற்றாமனிசரைப்பற்றி, அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று, ஓடிநையேனினி, ஃ
ஒள்ளிய நு}ல் கற்றார் பரவும் இராமானுசனைக,
கருதுமுள்ளம் பெற்றார்யவர்,
அவரெம்மைநின்றாளும்பெரியவரே. 86

பெரியவர் பேசிலும்பேதையர் பேசிலும், தன்குணங்கட்-
குரியசொல்என்றும், உடையவன்என்றென்று, ஃ
உணர்வில்மிக்கோர் தெரியும்வண்கீர்த்திஇராமானுசன்,
மறைதேர்ந்துலகில் புரியுநன்ஞானம்,
பொருந்தாதவரைப்பொரும்கலியே. 87

கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல், கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலைஉண்டு, தன்னுள்ளம்தடித்து, ஃ
அதனால்வலிமிக்க சீயம் இராமானுசன்
மறைவாதியராம், புலிமிக்கதென்று,
இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88

போற்றருஞ்சீலத்திராமானுச, நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல், அதுதாழ்வதுதீரில், ஃ
உன்சீர்தனக்கோர் ஏற்றமென்றேகொண்டிருக்கிலும்,
என்மனம்ஏத்தியன்றி ஆற்றகில்லாது,
இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே. 89

நினையார் பிறவியைநீக்கும்பிரானை, இந்நீணிலத்தே
எனையாளவந்த இராமானுசனை, ஃ
இருங்கவிகள்புனையார்புனையும்பெரியவர்தாள்களில்,
பூந்தொடையல் வனையார்,
பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே. 90

மருள் சுரந்தாகமவாதியர்கூறும், அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த, உலகிருள்நீங்கத், ஃ
தன்ஈண்டியசீர்அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் பொருள்சுரந்தான்,
எம்இராமானுசன் மிக்கபுண்ணியனே. 91

புண்ணியநோன்பு புரிந்துமிலேன், அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி, நுவன்றுமிலேன், ஃ
செம்மைநு}ற்புலவர்க்கெண்ணருங்கீர்த்தி இராமானுச!
இன்றுநீபுகுந்து, என்கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும்,
நின்றவிக்காரணம்கட்டுரையே. 92

கட்டப்பொருளைமறைப்பொருளென்று, கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும்பிரானல்லனே, ஃ
என்பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு
தன்னருள்என்னுமொள்வாளுருவி, வெட்டிக்களைந்த,
இராமானுசனென்னும்மெய்த்தவனே. 93

தவம்தரும் செல்வும்தகவும்தரும், சலியாப்பிறவிப்
பவந்தரும் , தீவினைபாற்றித்தரும், ஃ
பரந்தாமமென்னும் திவந்தரும்தீதில் இராமானுசன்தன்னைச்
சார்ந்தவர்கட்(கு), உவந்தருந்தேன்,
அவன்சீரன்றியானொன்றும்உள்மகிழ்ந்தே. 94

உண்ணின்றுயிர்களுக்குற்றனவேசெய்து, அவர்க்குயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி, ஃ
பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்றுவீடளிப்பான்
எம் இராமானுசன், மண்ணின்தலத்துதித்து,
உய்மறைநாலும்வளர்த்தனனே. 95

வளரும் பிணிகொண்டவல்வினையால், மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது, ஃ
முடைத்தலையூன்தளரும்அளவும்தரித்தும்விழுந்தும்
தனிதிரிவேற்(கு), உளரெம்இறைவர்,
இராமானுசன்றன்னைஉற்றவரே. 96

தன்னையுற்றாட்செய்யவும்தன்மையினோர், மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய, என்னையுய்த்தானின்று, ஃ தன்தகவால் தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லை என்றறிந்து,
தன்னையுற்றாரை, இராமானுசன்குணம்சாற்றிடுமே. 97

ழூஇடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம்நரகிலிட்டுச்
சுடுமேயவற்றைத், தொடர்தருதொல்லைச், ஃ
சுழல் பிறப்பில் நடுமேயினிநம்இராமானுசன்
நம்மைநம்வசத்தே, விடுமேசரணமென்றால்,
மனமே! நையல்மேவுதற்கே. 98

தற்கச் சமணரும் சாக்கியப்பேய்களும், தாழ்சடையோன்
சொற்கற்றசோம்பரும், சூனியவாதரும், ஃ
நான்மறையும் நிற்கக்குறும்புசெய் நீசரும்மாண்டனர்,
நீணிலத்தே பொற்கற்பகம்,
எம்இராமானுசமுனிபோந்தபின்னே. 99

போர்ந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு, உனதடிப்போதில்
ஒண்சீராம் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி, ஃ
நின்பாலதுவே ஈந்திடவேண்டும்இராமானுச!
இதுஅன்றியொன்றும், மாந்தகில்லாது,
இனிமற்றொன்றுகாட்டி மயக்கிடலே. 100

மயக்குமிருவினைவல்லியிற்பூண்டு, மதிமயங்கித்
துயக்கும்பிறவியில், தோன்றியஎன்னைத், ஃ
துயரகற்றி உயக்கொண்டுநல்கும் இராமானுச!
என்றதுன்னையுன்னி, நயக்குமவர்க்கிது இழுக்கென்பர்,
நல்லவர்என்றுநைந்தே. 101

நையுமனமுன்குணங்களைஉன்னி, என்நாவிருந்தெம்
ஐயன்இராமானுசனென்றழைக்கும், ஃ
அருவினையேன் கையுந்தொழும்கண்கருதிடுங்காணக்
கடல்புடைசூழ், வையம்இதனில்,
உன்வண்மையென்பாலென்வளர்ந்ததுவே? 102

வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய், அன்றுவாளவுணன்
கிளர்ந்;த, பொன்னாகம்கிழித்தவன், ஃ
கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும்சிந்தைஇராமானுசன்
என்றன் மெய்வினைநோய், களைந்துநன்ஞானம்
அளித்தனன், கையிற்கனியென்னவே. 103

104. கையிற்கனியென்னகண்ணனைக்காட்டித்தரிலும், உன்றன்
மெய்யிற்பிறங்கிய, சீரன்றிவேண்டிலன்யான், ஃ
நிரயத் தொய்யிற்கிடக்கினும்சோதிவிண்சேரினும்
இவ்வருள்நீ, செய்யில்தரிப்பன்,
இராமானுச! என்செழுங்கொண்டலே! 104

ழூசெழுந்திரைப்பாற்கடல்கண்டுயில்மாயன், திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில், மேவுநன்ஞானி, ஃ
நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன்
இராமானுசனைத்தொழும்பெரியோர்,
எழுந்திரைத்தாடும்இடம், அடியேனுக்கிருப்பிடமே. 105

ழூஇருப்பிடம் வைகுந்தம்வேங்கடம், மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம், மாயனுக்கென்பர்நல்லோர், ஃ
அவைதன்னொடும் வந்திருப்பிடம் மாயனிராமானுசன்
மனத்து, இன்றவன்வந் திருப்பிடம்,
என்றன் இதயத்துள்ளேதனக்கின்புறவே. 106

ழூஇன்புற்ற சீலத்திராமானுச, என்றும்எவ்விடத்தும்
என்புற்றநோய், உடல்தோறும்பிறந்திறந்து, ஃ
எண்ணரிய துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு,
உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி,
என்னையாக்கியங்காடபடுத்தே. 107

ழூஅங்கயல்பாய்வயல்தென்னரங்கன், அணிஆகமன்னும்
பங்கயமாமலர்ப், பாவையைப்போற்றதும், ஃ
பத்தியெல்லாம் தங்;கியதென்னத்தழைத்துநெஞ்சே!
நந்தலைமிசையே, பொங்கியகீர்த்தி,
இராமானுசனடிப்பூமன்னவே. 108

( பூமன்னுமாதுபொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னுமாறன், அடிபணிந்துய்ந்தவன், ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமானுசன்,
சரணாவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சேசொல்லுவோமவன்நாமங்களே. )

ஆழ்வார் திருவடிகளே சரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe