
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1026 ல் சோமநாதர் ஆலயம் முகம்மது கஜினியால் அழிக்கப்பட்டது. அதன் பிறகும் அது பல முறை தாக்கப்பட்டது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் பாரதிய ஆன்மீக, கலாசார நினைவுச் சின்னங்கள் பலமுறை அழிவுகளைச் சந்தித்தன. இருப்பினும் அந்த முழு வரலாற்றை அழிவின் வரலாறாகக் கருதுவதற்கு பதிலாக, பாரதிய ஹைந்தவ நம்பிக்கையின் உடைக்கமுடியாத வலிமையின் அடையாளமாக விவரிக்கலாம்.
சிதைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொண்ட பக்தர்கள் உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பினர். பக்ர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயங்கவில்லை. சோமநாத், அயோத்தி, காசி, மதுரா என்ற அழிக்கப்பட்ட நான்கு பண்டைய வழிபாட்டுத் தலங்களும் இந்திய கலாசாரத்தின் சின்னங்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, கோடிக்கணக்கான மக்கள் அந்த அழிக்கப்பட்ட இடங்களில் கோயில்களை மீண்டும் கட்ட முயன்றனர். மதத்தின் பெயரால் நாடு மோசமாகப் பிரிந்து போனதால் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர் முக்கிய ஆலயங்களையாவது மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காகக் காத்திருந்தனர்.
ஆனால் இந்தியாவிலேயே ஆட்சியாளர்களில் சிலர் ‘திருப்திபடுத்தும்’ அரசியலால் ஹிந்து மத எதிர்ப்புடன் இந்த மறுசீரமைப்புப் பணியை மிகப் பெரும் பாவமாகக் கருதி வரலாற்றுத் தவறை சரி செய்யவிடாமல் தடுத்துனர்.
ஆனால் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேலின் உறுதியாலும் அர்ப்பணிப்பாலும் சோமநாதர் கோவில் கட்டுமானம் அற்புதமாக முடிந்தது. அப்போதைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பல பெரியவர்களும் அதில் பங்கேற்றார்கள். அந்த ஊக்கத்தோடு அயோத்தி போன்ற ஆலயங்களும் ஒவ்வொன்றாகக் கட்டப்பட வேண்டியவையே. ஆனால் அது நடக்கவில்லை. காரணம், பட்டேல், எந்த கட்சியில் இருந்தாரோ அதே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அந்த முடிவுவை எதிர்த்தார்கள்.
பட்டேலின் மறைவுக்குப் பிறகு அந்த எதிர்ப்பும் திருப்திப்படுத்தும் அரசியலும் தொடர்ந்து மேலும் வலுவடைந்தது. அதனால்தான் அயோத்தியைப் புரனமைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. அந்த தாமதம் மேலும் சில சிக்கல்களை உருவாக்கிப் பகைமையை வளர்த்தது. ஆனால் இரும்பு மனிதரைப் போன்ற மற்றொரு வலிமையான தலைவரின் திறமையால் அயோத்தியைக் கைப்பற்ற முடிந்தது. காசியும், மதுராவும் இன்னும் அப்படியே உள்ளன.
ஆயிரக்கணக்கான பெரிய கோவில்களைச் சீரமைப்பு செய்துகொள்ள இயலாமல் போனாலும் குறைந்த பட்சம் இந்த முக்கிய கோவில்களையாவது கட்டமைத்துக் கொள்ள வேண்டும என்ற இன்றைய குறைந்தபட்ச கோரிக்கைகள் மத அரசியலால் தீர்க்கப்படாமல் உள்ளன.
இருப்பினும் நாசம் விளைந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தச் சூழலில் வரலாற்றைத் திரும்பப் பார்த்தால், அந்த இடங்களில் ஏதோ ஒரு வடிவில் கோவிலை கட்டிக் கொண்டு, அதனையும் இடித்தபோது, மற்றொரு பிரதிஷ்டையைச் செய்து கொண்டு, இடைவிடாமல் தொடர்ந்து நம்பிக்கையையும் பக்தியையும் வெளிபடுத்தி வரும் இந்துக்களின் உறுதியை கவனிக்க வேண்டும்.
பல அழிவுகளுக்குப் பிறகு சிறந்த அரசியான ராணி அகல்யாபாய் ஹோல்கர் கட்டிய விஸ்வநாதர் ஆலயமும் சோமநாதர் ஆலயமும் சிதையாமல் நிற்றன. ஆனால் வெளிநாட்டவரின் வழிபாட்டு இடங்களாக வன்முறையால் மாற்றப்பட்ட, உண்மையான கோவில்களை அதே தலத்தில் மீண்டும் புனரமைத்துக் கொள்ள இயலாமல் உள்ளோம், ஒரே ஒரு சோமநாதர் ஆலயத்தைத் தவிர.
1890 ல் கோவிலைப் பார்த்து வருந்தி, நெகிழ்ச்சியடைந்த சுவாமி விவேகானந்தர் 1897 ல் பேசுகையில், “சோமநாத் போன்ற தேவாயலங்கள் நமக்கு வரலாற்று புத்தகங்களை விட உண்மைகளை அதிகம் கற்பிக்கின்றன. தாக்குதலுக்கும் நாசத்திற்கும் உள்ளாகி, மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்ட இந்த கோவில்கள் பாரதத்தின் ஆத்மாவுக்கு வாழும் சாட்சிகள்” என்றார். பட்டேலுக்குத் துணையாக இருந்த கே.எம். முன்ஷி, ‘சோமநாத் தி ஷ்ரைன் எடர்னல்’ என்ற ஆதாரப்பூர்வமான நூலை அற்புதமாக எழுதினார்.

“வெறுப்பு அழிக்கிறது. நம்பிக்கை சாஸ்வதமாக உருவாக்குகிறது” என்று இந்த ஆயிரம் ஆண்டு வரலாற்றை, இடைவிடாத நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அண்மையில் வர்ணித்து, மாபெரும் தலைவர் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீநரேந்திர மோதி, சிறந்த ஊக்கமளிக்கும் செய்தியை வழங்கினார். சோமநாத் அறக்கட்டளையின் சேர்மனாகவும் இருக்கும் மோதிஜி, அன்றைய பட்டேலை நமக்கு நினைவூட்டினார்.
“வெறுப்போடு கூடிய கடந்த கால அழிவுகளின் வரலாற்றை அழித்து விட்டு, பக்தியின் வலிமையோடு தர்மத்தை சாதிக்கும் நம்பிக்கையின் வெற்றிகளையும், சிகரங்களோடும் கோபுரங்களோடும் உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோவில்களையும் நினைவூட்டினார்.
தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக்கும் புனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் அடையாளமான ஆலயங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நாட்டின் ஆத்மாவான ஆன்மீக சக்தியை நிலைநிறுத்திக் கொள்வோம்.
(source: தலையங்கம், ருஷிபீடம் பிப்ரவரி, 2026)




