
மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும், இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1 ஞாயிறு இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் தெரிவிகப்பட்ட முக்க்ய அம்சங்கள்…
* பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. சீர்த்திருத்தங்களால் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
* பாஜ அரசின் நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
* நீண்ட கால தொழில்முதலீட்டு திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம்.
* வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.
* மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.
முக்கிய கடமைகள்
- 3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
- பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.
- அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்.
- எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.
- அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.
- நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.
மத்திய பட்ஜெட் 2026-27
- மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது.
- அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர்.
- சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது
மத்திய பட்ஜெட் – சில அறிவிப்புகள்
- நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உலகத்தரத்தில் பயிற்சி.
- மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
- 2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.
- சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.
- மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
- வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலையான வளர்ச்சி
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.
- கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாகத்தில் நிலையானதாக உள்ளது.
- பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
- உற்பத்தி துறையில் அக்கறை, வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிப்பு
- இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
- பொருளாதார வளர்ச்சி சதவீதம் 7ஆக எதிர்பார்க்கப்படுகிறது.
- வறுமை பெரும் அளவு குறைப்பு
- உயிரி மருத்துவத்துறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை!
- ₹4 லட்சம் வரை – 0 வரி
- ₹4-₹8 லட்சம் வரை – 5% வரி
- ₹8-₹12 லட்சம் வரை – 10% வரி
- ₹12-₹16 லட்சம் வரை – 15% வரி
- ₹16-₹20 லட்சம் வரை – 20% வரி
- ₹20-₹24 லட்சம் வரை – 25% வரி
- ₹24 லட்சத்துக்கும் மேல் – 30% வரி
எதற்கெல்லாம் வரி விலக்கு?
- தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை
- விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு.
- தனி நபர்கள் வழக்கம் போல் ஜுலை 31ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
- தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
- வரி சார்ந்த குற்றங்களுக்கான தண்டனைகளில் தளர்வு; வரி சார்ந்த அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு.
- வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
- இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
- மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்படும்.
- காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.
- 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது
- விபத்து இழப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு
நிதி பகிர்வில் மாற்றம் இல்லை!
- மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை; 41% அளவிலேயே தொடரும்.
- சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்; புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
- மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE-மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
- வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
- வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.
- மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
மத்திய பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்
- ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
- தமிழ்நாட்டின் பொதிகை மலை, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.
- 2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.
- 2026-27 நிதியாண்டின் மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
- முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
- பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
- கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.
நீர் வழித்தடம்; அதிவேக ரயில்
- இந்தியாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்க நீர்வழி முனையம் அமைக்கப்படும்.
- நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
- மும்பை – புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி
- தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
- தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
- நாட்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய விதிகளில் தளர்வு.
- தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
- இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்; புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10% ஆக உள்ள முதலீடு வரம்பு, 24% ஆக அதிகரிக்கப்படுகிறது.
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
- மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.
- செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.
- பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்.
- சென்னை – பெங்களூரு; சென்னை – ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
- 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
- மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்
- இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும்.
- பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், ‘கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும்.




