26-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனைத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

nirmala seetharaman budget 2026 - 2026

2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார்.

முன்னதாக, கடந்த ஜன.28 அன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத் தக்கது. 2024ல் இடைக்கால பட்ஜெட், வழக்கமான பட்ஜெட் என இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்ற வகையில்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகிறது.இவ்வகையில், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.

முன்னர், மொரார்ஜி தேசாய் 11 முறையும், ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில்  நிர்மலா சீதாராமன் மட்டுமே, ஒரே பிரதமரின் ஆட்சியின் கீழ், தொடர்ச்சியான ஆண்டுகளில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது ஒரு சாதனைதான்!

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கினார். அவருக்கு திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் . 

பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றுதான் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

பட்ஜெட் உருவாக்கக் குழு:

மத்திய பட்ஜெட் உருவாக்கக் குழுவின் தலைவர் நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன்.  இந்தக் குழுவில்,  முதலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினத்துறை செயலாளர் வும்லுன்மங் வுல்நம், நிதி சேவைத் துறை செயலாளர் நாகராஜூ, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோர் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இரவில் இருந்து பகலுக்கு!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1999ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேர வசதிக்கு ஏற்ற வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  ஆனால், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில்,  நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பிரிட்டிஷ் அடிமைப் பழக்கம் முடிவுக்கு வந்ததுடன்,  பட்ஜெட் குறித்த செய்திகளை ஊடகங்களில் விவாதிக்கவும்,  பொது மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுடன் பேசவும் வசதியாக அமைந்தது

பிப்.1 தான் கணக்கு!

பட்ஜெட் தாக்கல் என்பது, பிப்ரவரி மாத கடைசியில் இருந்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதியன்று மாற்றப்பட்டது.  2016ம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது மாற்றப்பட்டு, பிப்.1 என மாற்றப்பட்டது. இதுவும் பொதுமக்களின் வசதி கருதியே நிகழ்ந்தது. 

ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டு தொடங்கும். பட்ஜெட் தாக்கலான ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசின் புதிய கொள்கைகள், விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைக்காது. மேலும் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு தொடங்கிவிடும். இதனால் பட்ஜெட் அமல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. 2017ல்  அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார். இதனால் அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் பிப். 1 இன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதும், அந்த நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories