26-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனைத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

nirmala seetharaman budget 2026 - 2026

2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார்.

முன்னதாக, கடந்த ஜன.28 அன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத் தக்கது. 2024ல் இடைக்கால பட்ஜெட், வழக்கமான பட்ஜெட் என இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்ற வகையில்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகிறது.இவ்வகையில், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.

முன்னர், மொரார்ஜி தேசாய் 11 முறையும், ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில்  நிர்மலா சீதாராமன் மட்டுமே, ஒரே பிரதமரின் ஆட்சியின் கீழ், தொடர்ச்சியான ஆண்டுகளில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது ஒரு சாதனைதான்!

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கினார். அவருக்கு திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் . 

பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றுதான் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

பட்ஜெட் உருவாக்கக் குழு:

மத்திய பட்ஜெட் உருவாக்கக் குழுவின் தலைவர் நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன்.  இந்தக் குழுவில்,  முதலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினத்துறை செயலாளர் வும்லுன்மங் வுல்நம், நிதி சேவைத் துறை செயலாளர் நாகராஜூ, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோர் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

இரவில் இருந்து பகலுக்கு!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1999ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேர வசதிக்கு ஏற்ற வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  ஆனால், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில்,  நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பிரிட்டிஷ் அடிமைப் பழக்கம் முடிவுக்கு வந்ததுடன்,  பட்ஜெட் குறித்த செய்திகளை ஊடகங்களில் விவாதிக்கவும்,  பொது மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுடன் பேசவும் வசதியாக அமைந்தது

பிப்.1 தான் கணக்கு!

பட்ஜெட் தாக்கல் என்பது, பிப்ரவரி மாத கடைசியில் இருந்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதியன்று மாற்றப்பட்டது.  2016ம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது மாற்றப்பட்டு, பிப்.1 என மாற்றப்பட்டது. இதுவும் பொதுமக்களின் வசதி கருதியே நிகழ்ந்தது. 

ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டு தொடங்கும். பட்ஜெட் தாக்கலான ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசின் புதிய கொள்கைகள், விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைக்காது. மேலும் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு தொடங்கிவிடும். இதனால் பட்ஜெட் அமல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. 2017ல்  அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார். இதனால் அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் பிப். 1 இன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதும், அந்த நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலானது.

ALSO READ:  தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories