ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

Published:

srivilliputhur temple palalayam - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதி கோவிலானது வட பெருங்கோவில் உடையான் திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலில் பெருமாள் வடபத்ர சாயி எனும் பெயரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஆண்டாள் இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்குத்தான் திருப்பாவை எனும் பாமாலைபாடி பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்படுகிறார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஒருசேர மங்களாசாசனம் செய்த பெருமையுடைய இந்த பெருமாளின் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் உப சந்நிதி விமானம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேக பெருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பல்வேறு ஆகம பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு மீன லக்னத்தில் வைகாசன முறைப்படி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து விமான ராஜகோபுரம் பால பிம்ப பிரதிஷ்டை, ஆராதனம், தீர்த்த கோஷ்டி எஜமான மரியாதை செய்யப்பட்டு பாலாலயம் துவங்கியது.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உபயதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img