இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

premalatha vijayakanth in srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.

உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.

கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories