இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

premalatha vijayakanth in srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.

உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.

கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories