இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

premalatha vijayakanth in srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.

உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.

கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories