இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

premalatha vijayakanth in srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.

உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.

கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories