அறநிலையத் துறை வழி தவறக் கூடாது!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சமீபத்தில் கேரளாவின் ‘திருநெல்லி’ தேவஸ்தானத்தின் நிதியை நஷ்டத்தில் இருக்கும்  கூட்டுறவு வங்கிகளை மீட்பதற்குப் பயன்படுத்தி, கால எல்லை தீர்ந்த பின்னும் கோவிலின் வைப்புத் தொகையைத் தீர்க்காமல் போனதால், அந்த வங்கிகளுக்கு எதிராக தேவஸ்தானம், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலின் நிதிகளை வங்கியின் பயன்பாட்டுக்குச் செலவழிக்கக் கூடாது என்றும் அந்த டெபாசிட்டுகளை உடனடியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று கூறி அந்தத் தீர்ப்பையே உறுதியாகக் கூறியது உச்ச நீதிமன்றம். கோவில் நிதிகள் அந்த தெய்வத்தைச் சேர்ந்தது என்றும், அவற்றைக் கோவிலின் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடக் கூறியது. கோவில் நிதிகள், நஷ்டத்தில் இருக்கும் வங்கியின் சொத்துக்கள் அல்ல என்று எச்சரித்தது.

அதேபோல் சிறிது காலம் முன்பு ஹிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றம், “கோவில் நிதிகள் பவித்திரமானவை. அவை ஆலயத்தின் தெய்வத்துடையவை. மாநில வருமானம் அல்ல” என்று தெளிவுபட உத்தரவிட்டது.

பக்தர்கள் நம்பிக்கையோடு ஆலயத்திற்காகவும், அதிலிருக்கிரும் தெய்வத்திற்காகவும் அளித்த நிலம், சொத்து, நன்கொடை போன்றவற்றை, ‘கோவிலின் உபயோகத்திற்காக’ என்ற உணர்வோடு அளிக்கிறார்கள். அவற்றை கோவிலின் பூஜைகளுக்கும், நித்திய வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்ற தெய்வீகச் செயல்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும், மேம்பாட்டுக்கும், மராமத்துக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை அரசாங்க நிகழ்ச்சிகளுக்கோ, பிற செயல்களுக்கோ பயன்படுத்துவது மத நம்பிக்கைகளை வஞ்சிப்பதாகும். அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்று தீர்ப்பு கூறியது.

அரசாங்க நலத் திட்டங்களுக்கு ஆலய நிதியைப் பயன்படுத்தக் கூடாதென்று நேரிடியாகவே குறிப்பிட்டது. சாலைகள், பாலம் அமைப்பது, ‘செக்யூலர்’ பணிகள், அரசியல், சமுதாய நிகழ்சிகள் போன்ற எவற்றுக்கும் பயன்படுத்தக் கூடாதென்றும் தெரிவித்தது. வி.ஐ.பிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்காக ஆகும் செலவுகளை கோவில் சொத்து மூலம் செலவழிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியதும் கவனிக்கத் தக்கது. இந்த இரண்டு தீர்ப்புகளும் கவனத்திற்குரியவை.

இந்தியாவின் பல மாநிலங்களில், அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் கோவில்களிலிருந்து காலந்தவறாமல் அதிக தொகை குறிப்பிட்ட நேரத்தில்   அரசாங்கத்திற்குச் சேருகின்ற செய்தி ஆலய பக்தர்களுக்குத் தெரியாது. கோவில் சொத்தும், நன்கொடைகளின் வருமானமும் அரசியல் ஊழல்வாதிகளின் கைகளுக்குச் செல்கின்ற உண்மை மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது.

பிற மத வாக்கு வங்கிக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் நம் ஆலயங்களின் வளங்கள் பகிரப்படுகின்றன. ஆனால் பிற மத நிலையங்களின் வருமானம் அறநிலையத்துறைக்கு வருவதில்லை. அதாவது பிற மத அமைப்புகளின் வருமானம் அந்தந்த மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசாங்கச் செயல்களுக்கும், பிற மத நலனுக்கும் செலவிடப்படுகிறது.

அதோடு கூட, ஹிந்துக்களை அழிக்கவேண்டும் என்றும் நாட்டை நலிவுறச் செய்ய வேண்டும் என்றும் சதித் திட்டம் தீட்டும் தீவிரவாத மதத்தைச் சேர்ந்தவர்கள் நம் கோவில்களில் ஊழியர்களாகவும், சுற்றுப்புறங்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் நிலைபெறுகிறார்கள். அதனால் ஆபத்து மறைந்துள்ளது என்று தெரிந்தும், தொடர்புடைய துறையினர் கண்டு கொள்வதில்லை.

கோவில்களில் அரசர்களும் பக்தர்களும் அளித்த வரலாறுச் சிறப்புமிக்க தங்க ஆபரணங்களைத் தம் விருப்பபடி சில மாநில அரசுகள் உருக்கித் தம் தேவைக்குப் பயன்படுத்துகின்றன. கோவில்களுக்கு மக்கள் நன்கொடையாக அளித்த சொத்து விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

ஹித்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கரங்களில் இருந்து விடுவிப்பது தேவையா? இல்லையா? இந்த விவாதம் ஒருபுறம் பலனின்றி நடந்து கொண்டே உள்ளது. அதைவிட, அறநிலையத் துறையில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, கேரளா, ஹிமாச்சல்பிரதேஷ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு எல்லா மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

‘ஆலய நிதி ஆலயத்திற்கே’ என்ற முக்கியச் செய்தியை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த கோவில்களின் அதிக வருமானத்தை வளர்ச்சியடையாத கோவில்களின் வளர்ச்சிக்காகச் செலவழிப்பதில் தவறில்லை.

ஹிந்து ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இருக்கும் அமைப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். மக்கள் இந்தப் புரிதலை அடைத்து அரசாங்கத்தின் மேல் அழுத்தம் எடுத்து வர வேண்டும்.


 Source: ருஷிபீடம் மாத இதழ், ஜனவரி 2026


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Topics

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

Entertainment News

Popular Categories