வைகுந்த ஏகாதசி; ஸ்ரீவி., கோயிலில் பரமபதவாசல் திறப்பு! திரளான பக்தர்கள் தரிசனம்!

srivilliputhur paramapatha vasal thirappu - 2026

கோபாலா,கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் தோன்றிய ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்து அரங்கன் மீது பக்தி கொண்டு மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல் பாடி கைத்தலம் பற்றிய பெருமை உடையது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

அந்த வகையில் மார்கழி நீராட்ட உற்சவம் கடந்த 20ஆம் தேதி பச்சை பரத்தலுடன் தொடங்கி புகழ்பெற்று உற்சவம் ஆரம்பித்தது. பத்து நாட்கள் காலை இரவு வேளைகளில் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்த நிலையில் 30ந்தேதி அதிகாலை5:30மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திருக்கோயில் சொர்க்கவாசல் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டது அப்பொழுது சொர்க்கவாசலுக்கு வெளியே வேதாந்த தேசிகர் ராமானுஜர் பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர நின்று மங்களாசாசனம் செய்தார் அப்பொழுது சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு அதன் வழியே மேளதாளம் முழங்க பெரிய பெருமாள் ஆண்டாள் ரங்க மன்னார் ஆகியோர் வர சரியாக காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

srivilliputhur vaikunta ekadasi - 2026

அப்பொழுது திரண்டு இருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர பக்தி கோசமிட்டனர். தொடர்ந்து ஆண்டாள் ரங்க மன்னர் ராபத்து மண்டபத்திற்கு சென்று அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜுயர் சுவாமிகள் சட்டமன்ற உறுப்பினர் இ எம் மான்ராஜ் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி.கண்ணன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் பக்தர்கள் சுவாமிகளை சிரமம் இன்றி தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. சொர்க்கவாசல் திறப்பு தொடர்ந்து இராப்பத்து என்னும் திருவாய்மொழித் திருநாள் நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகின்றன. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவமும் நடைபெறுகிறது. இதில் திரு ஏகாந்த திருமஞ்சனம் அரையர் வியாக்கியானம் கைத்தல சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செ. மாரியப்பன் விருதுநகர் உதவி ஆணையர் மு. நாகராஜன் கோயில் செயல் அலுவலர் செள. சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் கோயில் அலுவலர் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

நேற்று ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு ஏராளமான உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்களும் சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப சாமி பக்தர்களும் இடைவிடாமல் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories