
செங்கோட்டை, டிச, 30: செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து யாதவ சமுதாயம் கரையாளர் சமுதாய நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி திருப்பாவை தோன்பு மற்றும் பஜனை ஊர்வலம் சிறப்பாக நடத்தப்படுவது வழககம்.
இந்தாண்டு கடந்த டிசம்பர் 16ஆம் தேதியில் திருப்பாவை நோன்பு பஜனை ஊர்வலம் துவங்கப்பட்டு நாள்தோறும் பஜனை ஊர்வல நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலில் நிறைவடையும் இன்று 27ஆம் நாள் திருப்பாவை நோன்பு பஜனை ஊர்வலம் காலையில் பாளை சுதாகர்ஜீ வேதநாராயணன் பஜனை மண்டலி குழுவினா் மற்றும் பக்தர்கள் கோவில் முன்பிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுமிகள் கோலாட்டம் மற்றும் இசை வாத்தியங்களுடன் பஜனைபாடி வீதிகளில் வலம் வந்தனா். அதனைதொடா்ந்து ஸ்ரீமுப்புடாதி அம்மன் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காராம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை விழாக்கமிட்டியினா் யாதவர் சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.




