செங்கோட்டையில் நகர வாணியர் சங்க 27ஆம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு விழா!

Published:

sengottai vaniyar sangam kalvi nidhi - 2026

செங்கோட்டை எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி வாணியா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர வாணியா் சங்கம் சார்பில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியா்கள் மற்றும் அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கல்விநிதி பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு நகர வாணியா் சங்க கல்விநிதி தலைவா் பணிநிறைவு தாசில்தார் குமரேசன் செட்டியார் தலைமை தாங்கினார். மேலுார் சமுதாய தலைவா் ஐயப்பன் செட்டியார், தஞ்சாவூர் தெரு தலைவா் குமார் செட்டியார், எஸ்ஆர்கே தெரு மேற்கு பகுதி தலைவா் சுப்பிரமணிய செட்டியார், எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி தலைவா் முத்துசாமி செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

பணிநிறைவு தலைமை ஆசிரியா் மாடசாமி செட்டியார் இறைவணக்கம் பாடினார். நகர வாணியா் கல்விநிதி செயலாளார் ஐயப்பன் செட்டியார் அனைவரையும் வரவேற்று பேசினார். நகரத் துணைத்தலைவா் இராமகிருஷ்ணன் அறிக்கை வாசித்தார். நகரப் பொருளாளா் முருகன் செட்டியார் வரவுசெலவு கணக்கு வாசித்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நிகழ்ச்சியில் மாவட்ட வாணியா் சங்க தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் பிச்சுமணி, பொருளாளா் தளவாய் சுந்தரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் செந்தில் ஆறுமுகம் நகர வாணியா் சமுதாய துணைச்செயலாளா் திருமலைச்செட்டியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

அதனை தொடா்ந்து ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கலைஅறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வா் மீனாட்சிசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியா்களுக்கு கல்விநிதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழச்சியில் மேலுார் பகுதி வாணியா்சங்க பொருளாளா் நம்பிராஜன், துணைத் தலைவா் பூதத்தான்(எ)மணி செட்டியார், துணைச் செயலாளா் சுப்பிரமணியன் செட்டியார், தஞ்சாவூர் தெரு துணைத் தலைவா் பேச்சிமுத்துசெட்டியார், பொருளாளா் இசக்கி செட்டியார், துணைச்செயலாளா் சந்துார் செட்டியார், எஸ்ஆர்கே தெரு மேற்கு பகுதி செயலாளா் சங்கர் செட்டியார், பொருளாளா் பரமசிவன் செட்டியார், துணைத் தலைவா் திருமலைச் செட்டியார், எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி செயலாளா் உலகநாதன் செட்டியார், பொருளாளா் சங்கர் செட்டியார், துணைத் தலைவா் ஹரிநாராயணன் செட்டியார் மற்றும் நிர்வாகிகள் மாணவ, மாணவியா், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

முடிவில்  நகர வாணியா் சங்க கல்விநிதி துணைச் செயலாளா் கருப்பசாமி செட்டியார் நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img