பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

modi and trump - 2026
#image_title

பயந்துட்டீங்களா மிஸ்டர்  பெரியண்ணன்! வல்லரசு நாடுகள் என்ற பெயரில் உலக பெரியண்ணனாக நீங்கள் இருந்ததை, உங்கள் ஆயுதங்கள் தான் தலை சிறந்த போர் ஆயுதங்கள் என்று உலகை இது நாள் வரை நம்ப வைத்து இப்போது அது பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலால் பஸ்பமாகி, அமெரிக்க சீன துருக்கி ஆயுதங்கள் வெறும் தகர டப்பா தான் என்று நிருபணமாகி விட்டதால், அதிர்ந்த வெளிப்பாடு – உங்களின் இந்தியாவில் முதலீடு வேண்டாம் என்ற வயிற்றெரிச்சலின் கூவலால்  உள்ளுக்குள் இருக்கின்ற  பயம் தெரிகின்றது!

ட்ரம்ப் ஐயா .. உலகின் விஸ்வ குருவை நீங்கள் கட்டிப் பிடித்து எனது நண்பர் மோடி என்று சொல்லும் போதே எங்கள் பிரதமர் மோதி உஷாராகி  விட்டார் .

ஏனெனில் உலக வரலாற்றில் உங்கள் நாட்டின் முதுகில் குத்தும் பச்சோந்தித்தனம் பலமுறை பல வகைகளில் வெளிப்பட்டு இருப்பதை அறியாதவரா எங்கள் பிரதமர்?

உங்களின் இரட்டை கோபுரங்கள் நசுக்கப்பட்டு  உங்கள் நாட்டையே கலங்க வைத்த பயங்கரவாதி பின்லேடனைப் பிடிக்க நீங்கள் பயங்கரவாத பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே ராணுவத்தை அனுப்பி கள்ளாட்டம் ஆடி பின்லேடனை போட்டுத் தள்ளிய போது இருந்த பழிவாங்கும் வெறி எங்கள் பிரதமரிடம் இருக்கக் கூடாதா?

26 பெண்களின் கணவர்களை கண் முன்னே சுட்டுக் கொன்ற பாகிஸ்தான்  பயங்கரவாதிகள், “போய் உங்கள் மோடி கிட்ட சொல்லு” என்று கொக்கரித்த போதே எங்கள் பிரதமர் இனி உலகில் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா தான் முன்னணி வகிக்கும் என்பதை தன் சிந்தூர் தாக்குதல் மூலம் நிருபித்தார். இப்போது உங்கள் ஆயுதங்களின் தர லட்சணங்களை வெளிக் கொணர்ந்தது கண்டு உலக நாடுகள் அமெரிக்கா சீனா பூச்சாண்டித்தனம் இனி செல்லுபடி ஆகாது என சிரிக்கின்றனர். இந்தியாவை இந்தியப் பிரதமரை இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு வாயடைத்து வியக்கின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மேக் இன் இந்தியா ஆயுதத் தயாரிப்பை வாங்க வரிசை கட்டி நிற்க முந்தினால் உங்கள் கதி அதோ கதி என பேஜாராகி பீதியில் கண்டபடி உளறி அறிக்கை விடுவதில் இருந்தே அமெரிக்க நம்பகத்தன்மை லட்சணம் சந்தி சிரிக்கிறது .

இதில் அண்டை நாடு சீனா குள்ளநரி பயங்கரவாத பாகிஸ்தானோடு  கள்ள உறவாடி இந்தியாவை எப்படி எப்போது   நசுக்கலாம் என்று கண்ட கனவு சிந்தூர் அதிரடி தாக்குதலால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி பீதியாகி உங்களோடு சமரசமாகி சித்து வேலை செய்கிறது .

இந்தியா, ஞானிகள் யோகிகள் வாழ்ந்த தர்மத்தின் வழி நடக்கும் நாடு. ஒரு காலத்தில் தான் அடிமையாக்கி வைத்திருந்த நாடு இன்று தன்னையே பின்னிற்கு தள்ளி வளர்ந்து வருவதை உங்களால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது உங்கள் உளறல்கள் மூலம் தெரிகின்றது .

செய்த வினை செய்வினையாகி தன்னையே தாக்கி அழிக்கும் என்பதை உலகிற்கு அதர்மத்திற்கு எடுத்துச் சொன்ன நாடு  எங்கள் இந்தியா .

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

எக்காலத்திலும் எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை எங்கள் பாரதம் . வலிய போரைத் திணித்ததில்லை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையாகிய காலத்தில் இருந்து 78 ஆண்டுகளாக தலைகனத்துப் போன மதவெறியில்  ஹிந்துக்களை பாகிஸ்தான் வாழ விடவில்லை என்பதற்கு அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாட்சி  என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை.

இதை  உண்மையாக கண்டிக்காமல் வெளியே பொய்யாகக்  கண்டித்து உள்ளே ஆயுதங்களை கொடுத்து உறவாடும் உங்கள் அரசியல் சூழ்ச்சி எத்தனை நாளைக்கு தான் ஜெயிக்கும்?

அதர்மத்தை அடக்கம் செய்து தர்மத்தை வாழ வைக்க இந்தியாவால் மட்டுமே சாத்தியம் என்பதை சிந்தூர் நிருபித்து விட்டது . இனி இந்தியா தர்மத்தின் வழி நடப்பவரை மட்டுமே ஏற்கும் .

உள்ளிற்குள் குமறிப் பயனில்லை டிரம்ப், சீன அரசியல்வாதிகளே. இனி இந்தியா நிச்சயம் அடித்து ஆடும். தேசப்பற்றுள்ள எங்கள் பிரதமர் மோதியை உங்கள் சூழ்ச்சிகளால் ஒரு கூந்தலையும் அசைத்து பார்க்க முடியாது.

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

பாரத் மாதா கீ ஜே . ஜெய்ஹிந்த்!

  • விஜயலஷ்மி காளிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories