அன்று சட்டமன்றத்தில் விஜயகாந்த்… இன்று பத்திரிகையாளர் மன்றத்தில் பிரேமலதா! அகம்பாவத்தின் வீழ்ச்சி!

Premalatha Vijayakanth - 2026விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது கையாண்ட மொழி குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. “நீ” என்று ஒருமையிலும், “என் கேட்டின் முன் நிற்பதால் உனக்கு செய்தி தரமுடியாது” என்ற தொனியிலும் பேசினார். சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய மகனும் இது போலத்தான் பேசினார்.

சுமார் 25 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அலுவலகங்களுக்கும் செய்தி சேகரிப்பவன் என்ற முறையின் சென்றிருக்கிறேன். எல்லாக் கட்சி அலுவலகங்களுக்குள்ளும் நுழைந்து தலைவர்களையோ மற்றவர்களையோ சந்தித்துப் பேச முடியும்.

கலைஞர் உயிரோடு இருக்கும் வரை பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே நின்று ஏதாவது சொல்லி செல்வார். அவருடைய மகன் அழகிரி கைது செய்யப்பட்ட நாள் கூட எங்களிடம் பேசினார். 2-ஜி வழக்கில் திமுகவுக்கு எதிரான தீர்ப்பு வந்த போதும் பேசினார். சில நேரங்களில் கோபப்பட்டாலும் உடனே சிரித்து அதை சரி செய்து விடுவார்.

vijayakanth 12 600 01 1504279982 - 2026

மூப்பனார் இருக்கும் வரை சத்தியமூர்த்தி பவனுக்குப் போனால் காபி கிடைக்கும். சில நாட்களில் கூடுதலாக வடையும் ஜாங்கிரியும் உண்டு. இதெல்லாம் பெரிய விசயமில்லைதான். ஆனால் பத்திரிகையாளர்களை மதித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அப்படியே. அங்கிருந்தே “காங்கிஸ் வேஸ்ட்” என்று பேசிவிட்டு வருவோம். அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

ALSO READ:  177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

ஜெயலலிதாவும் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொள்வார். ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் பதிலை அழகாக மொழிபெயர்த்து சொல்வார். ஆனால் எப்போதும் சந்திப்பார் என்று சொல்ல முடியாது. அதிமுக அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளும் மிகவும் சிறப்பாக நடந்து கொள்வார்கள். அக்கட்சித் தலைவர்களுடன் எப்போதும் தொலைபேசியில் கூட பேச முடியும்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் விஜயகாந்துக்கும் நட்பு இருந்தது. சில முறை பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் பேட்டியின் காரணமாக என் மீதும் பத்திரிகை மீதும் வழக்கு வந்த போது கூட என்னிடம் பேசினார்.

அவர் உடல் நலம் குறைந்ததும் சந்திப்பு நிகழவில்லை. அவர் கட்சி அலுவலகத்தின் கதவை திறக்கவே மாட்டார்கள். அவருடயை மனைவி இப்போது திமுகவின் மீதுள்ள கோபத்தை பத்திரிகையாளர்கள் மீது காட்டியிருக்கிறார்.

அவர்கள் சரியாக நடந்து கொண்டிருந்தால் மற்றக் கட்சிகளும் அவர்களை சரியாக நடத்தியிருக்கும். பாமகவுக்கு கிடைத்த சீட் கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் பலத்தை நிரூபித்தாலே கிடைக்கும். பேரம் பேசுவது தவறில்லைதான். எல்லாக் கட்சிகளுமே கூட்டணியை முடிவு செய்து விட்டு பேரம் பேசுவார்கள். பிரேமலதா மட்டும் கூட்டணியில் இடம் பெறவே பேரம் பேசினார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

திமுக அவரைத் தாங்கிய போது வரவில்லை. அதிமுகவும் பணியாத போது மீண்டும் திமுகவிடம் போனதால்தான் அவமானம் ஏற்பட்டது. இதை அவர் உணர மாட்டார். ஏனென்றால் அவருக்கு ஏற்கெனவே தான் பெரிய தலைவி என்று நினைப்பு மண்டையில் ஏறி விட்டது.

vijayaprabhakaran - 2026

இது போன்ற தலைவியும் தலைவர்களும் உருவாகுவதற்கு அவர்களை ஆதரிக்கும் மக்கள்தான் காரணம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று யோசிப்பது போல், யாரை சேர்த்தால் ஜெயிக்கும் என்று கட்சிகள் நினைக்கும் வரும் ஆயிரம் பிரேமலதாக்கள் உருவாகுவார்கள். கூடவே சுதீஸ் போன்ற மைத்துனர்களும்.

யு டியூபில் இந்திரா காந்தி அளித்த பேட்டிகள் உள்ளன. சங்கடமான கேள்வியைக் கேட்பவருக்கும் அவர் அளிக்கும் பதிலை கேளுங்கள். அரசியல் மண்டையில் ஏறும்.

  • ஜி.கோலப்பன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories