அன்று சட்டமன்றத்தில் விஜயகாந்த்… இன்று பத்திரிகையாளர் மன்றத்தில் பிரேமலதா! அகம்பாவத்தின் வீழ்ச்சி!

Premalatha Vijayakanth - 2026விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது கையாண்ட மொழி குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. “நீ” என்று ஒருமையிலும், “என் கேட்டின் முன் நிற்பதால் உனக்கு செய்தி தரமுடியாது” என்ற தொனியிலும் பேசினார். சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய மகனும் இது போலத்தான் பேசினார்.

சுமார் 25 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அலுவலகங்களுக்கும் செய்தி சேகரிப்பவன் என்ற முறையின் சென்றிருக்கிறேன். எல்லாக் கட்சி அலுவலகங்களுக்குள்ளும் நுழைந்து தலைவர்களையோ மற்றவர்களையோ சந்தித்துப் பேச முடியும்.

கலைஞர் உயிரோடு இருக்கும் வரை பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே நின்று ஏதாவது சொல்லி செல்வார். அவருடைய மகன் அழகிரி கைது செய்யப்பட்ட நாள் கூட எங்களிடம் பேசினார். 2-ஜி வழக்கில் திமுகவுக்கு எதிரான தீர்ப்பு வந்த போதும் பேசினார். சில நேரங்களில் கோபப்பட்டாலும் உடனே சிரித்து அதை சரி செய்து விடுவார்.

vijayakanth 12 600 01 1504279982 - 2026

மூப்பனார் இருக்கும் வரை சத்தியமூர்த்தி பவனுக்குப் போனால் காபி கிடைக்கும். சில நாட்களில் கூடுதலாக வடையும் ஜாங்கிரியும் உண்டு. இதெல்லாம் பெரிய விசயமில்லைதான். ஆனால் பத்திரிகையாளர்களை மதித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அப்படியே. அங்கிருந்தே “காங்கிஸ் வேஸ்ட்” என்று பேசிவிட்டு வருவோம். அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

ஜெயலலிதாவும் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொள்வார். ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் பதிலை அழகாக மொழிபெயர்த்து சொல்வார். ஆனால் எப்போதும் சந்திப்பார் என்று சொல்ல முடியாது. அதிமுக அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளும் மிகவும் சிறப்பாக நடந்து கொள்வார்கள். அக்கட்சித் தலைவர்களுடன் எப்போதும் தொலைபேசியில் கூட பேச முடியும்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் விஜயகாந்துக்கும் நட்பு இருந்தது. சில முறை பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் பேட்டியின் காரணமாக என் மீதும் பத்திரிகை மீதும் வழக்கு வந்த போது கூட என்னிடம் பேசினார்.

அவர் உடல் நலம் குறைந்ததும் சந்திப்பு நிகழவில்லை. அவர் கட்சி அலுவலகத்தின் கதவை திறக்கவே மாட்டார்கள். அவருடயை மனைவி இப்போது திமுகவின் மீதுள்ள கோபத்தை பத்திரிகையாளர்கள் மீது காட்டியிருக்கிறார்.

அவர்கள் சரியாக நடந்து கொண்டிருந்தால் மற்றக் கட்சிகளும் அவர்களை சரியாக நடத்தியிருக்கும். பாமகவுக்கு கிடைத்த சீட் கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் பலத்தை நிரூபித்தாலே கிடைக்கும். பேரம் பேசுவது தவறில்லைதான். எல்லாக் கட்சிகளுமே கூட்டணியை முடிவு செய்து விட்டு பேரம் பேசுவார்கள். பிரேமலதா மட்டும் கூட்டணியில் இடம் பெறவே பேரம் பேசினார்.

திமுக அவரைத் தாங்கிய போது வரவில்லை. அதிமுகவும் பணியாத போது மீண்டும் திமுகவிடம் போனதால்தான் அவமானம் ஏற்பட்டது. இதை அவர் உணர மாட்டார். ஏனென்றால் அவருக்கு ஏற்கெனவே தான் பெரிய தலைவி என்று நினைப்பு மண்டையில் ஏறி விட்டது.

vijayaprabhakaran - 2026

இது போன்ற தலைவியும் தலைவர்களும் உருவாகுவதற்கு அவர்களை ஆதரிக்கும் மக்கள்தான் காரணம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று யோசிப்பது போல், யாரை சேர்த்தால் ஜெயிக்கும் என்று கட்சிகள் நினைக்கும் வரும் ஆயிரம் பிரேமலதாக்கள் உருவாகுவார்கள். கூடவே சுதீஸ் போன்ற மைத்துனர்களும்.

யு டியூபில் இந்திரா காந்தி அளித்த பேட்டிகள் உள்ளன. சங்கடமான கேள்வியைக் கேட்பவருக்கும் அவர் அளிக்கும் பதிலை கேளுங்கள். அரசியல் மண்டையில் ஏறும்.

  • ஜி.கோலப்பன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories