December 6, 2025, 12:15 AM
26 C
Chennai

வரலாற்றிலேயே சோ ராமசாமி கண்ணீர் சிந்தியது.. ஒரே ஒரு இடத்தில்தான்!

cho ramasamy - 2025

எல்லா இடங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான். அது காமராஜர் பணக்காரர் கைக் கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கப்படுகின்றனர் என திராவிடக் கைக்கூலிகளான கருணாநிதி தமிழக மக்களிடம் பொய்களைக் கூறி சர்ச்சை கிளப்பிய நேரம்.

காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இது குறித்துச் சொன்ன காமராஜர், அவரிடம் சட்டெனக் கேட்டார்… “நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என் கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?”

இல்லை என தலையாட்டினார் சோ!

ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?

நெற்றியினைச் சுருக்கி இல்லை என்றார் சோ!

kamarajar - 2025

இங்கு அவ்வளவுதான் வசதி. நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணேன்!

தில்லியில் இருந்து திடீர்னு வர்றவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை. அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா?!

ஒரு ஒண்டிக்கட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக… என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.

சோ ராமசாமி கண்ணீர் சிந்திய இடம் இதுதான்! இது ஒன்றுதான்.

kamaraj karunanidhi - 2025

அன்று காமராஜரைப் பற்றி பல பொய்க் கதைகளைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து தங்களை வளப்படுத்தியவர்கள்… தற்போது மோடியைப் பற்றி கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்!

தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதியான காமராஜரை இழந்ததுபோல்….மோடியை இழக்க தற்போதைய தமிழக இளைஞர்கள் தயாராக இல்லை!

அன்று ஒரே ஒரு முரசொலி இருந்தது! முரசொலியின் வாக்கைப் பிரதிபலிக்க ஓரிரு நாளிதழ்கள் இருந்தன. ஆனால் நாடக மேடைகளில் தோன்றும் நடிகர்களும் சினிமாக்காரர்களும் முரசொலியை பிரதிபலித்தார்கள்.

இன்று திரும்பிய பக்கமெல்லாம் மீடியாக்கள்! எல்லாமே முரசொலியின் வார்த்தைகளுக்கு முட்டுக் கொடுப்பவை. திமுக.,வே நடத்தும் ஊடகங்கள் பல. அவற்றின் மூலமான பிரசாரங்களும் பலம் வாய்ந்தவை தான்!

ஆனால் இன்று இளைஞர்களின் கையில் இருப்பது செல்போன். அதன் மூலமான தெளிவாக்க பிரசாரங்களால் உண்மையை உணர்ந்து கொண்டுள்ளனர் இளைஞர்கள். விவரம் அறிந்தவர்கள், படித்தவர்கள், திமுக.,வின் பொய்களை நம்பத் தயாராக இல்லை! ஆனால் இன்னமும் குட்டையில் விழுந்து கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டிருப்பவர்கள், திமுக., அவிழ்த்து விடும் பொய்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டு சோம்பேறிகளாய் நேரம் போக்குகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories