சமைராவின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்!

ganeshvenkatram - 2026

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மகளின் போட்டோவை முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேறமாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்தும் வருகிறார் கணேஷ்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்து கொண்டார் கணேஷ் வெங்கட்ராம்.

ganesha venkatram 1 - 2026

இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் கணேஷ் வெங்கட்ராம்.

கணேஷ் வெங்கட்ராம் டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

குழந்தை பிறந்த அன்றே, குழந்தை தனது விரலை பற்றியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு குழந்தையின் முகத்தை காட்டவில்லை.

இந்நிலையில் இன்று முதல் முறையாக கணேஷ் வெங்கட்ராம் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ளார். பார்ப்பவர்கள் அனைவரும் வாவ் என வாயை பிளக்கும் அளவுக்கு செம க்யூட்டாக இருக்கிறார் கணேஷின் மகள்.

மகள் மட்டும் தனியாக படுத்திருக்கும் போட்டோ ஒன்றையும், மனைவி மகளுடன் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

மேலும் ஒரு சிறிய முகத்தில் கடவுளின் அருள் அனைத்தும்.. என்று குறிப்பிட்டுள்ள கணேஷ், நண்பர்களே, எங்கள் சிறிய இளவரசி சமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து அற்புதமான போட்டோக்களை எடுத்து வேடிக்கையான அனுபவத்தை கொடுத்த அம்ரிதாவுக்கு பெரிய நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சமைராவுக்கு ஹலோ சொல்லியிருப்பதோடு செம்ம க்யூட் என தெரிவித்துள்ளனர். மேலும் உன் அம்மாவையும் அப்பாவையும் போல க்யூட்டாக இருக்கிறாய், நீ பெரிய அதிர்ஷ்டசாலி எங்களின் கணேஷ் அண்ணா போன்ற ஒருவர் உனக்கு தந்தையாக கிடைத்திருப்பது என தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories