சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலை குவித்தது. இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்திற்காக சமந்தா-ராம்சரண்தேஜா நடித்த முத்தக்காட்சி ஒன்றை படமாக்கியதற்காக தயாரிப்பாளர் தனக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் சம்பளம் கொடுத்ததாக இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சி ஒன்றை படமாக்கியபோது இருவருமே தயங்கி தயங்கி நடித்ததால் காட்சி சரியாக வரவில்லை .என்றும், இதனால் கால தாமதம் ஆகிவந்ததை கண்டுகொண்ட தயாரிப்பாளர் தன்னிடம் இந்த காட்சியை சீக்கிரம் எடுத்த்தால் ரூ.10 லட்சம் கூடுதலாக சம்பளம் தருவதாக கூறியதாகவும், இதனால் தான் அந்த முத்தக்காட்சியை சமந்தாவிடம் உணர்ச்சிமயமாக விளக்கி பத்தே வினாடியில் முத்தக்காட்சியை திருப்தியாக படமாக்கி தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.10 லட்சம் பரிசை பெற்றதாகவும் கூறியுள்ளார்.