December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

மதுரை சந்தையூர் சாதி பிரச்னை: திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்

thirumava e1522076664718 - 2025

பெருமதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களுக்கு

வணக்கம். நலமே நாடுகிறேன்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் என்கிற ஊரில் ஆலய வழிபாடு மற்றும் பாதை பிரச்சினை – தீண்டாமை சுவர் பிரச்சினை தங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்து பறையர் சமுதாய மக்களுக்கும் – இந்து அருந்ததியர் சமுதாய மக்களுக்குமான தீண்டாமை பிரச்சினை உண்மையில் மனம் வேதனை அடையச் செய்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து எங்கெல்லாம் தீண்டாமை பிரச்சினை எழுகின்ற நேரங்களில் எல்லாம் மதுரை உத்தப்புரம் – நாகை மாவட்டம் கள்ளிமேடு – கரூர் சுக்காலியூர் ….. இப்படி பல ஊர்களில் இரு தரப்பு மக்களுக்கும் சமாதான சூழல் உண்டாக்கிட இந்து மக்கள் கட்சி சார்பில் அந்த ஊர்களிலே தங்கியிருந்து ஒரு சிறு அணில் போல உதவினேன்.

மேலும் ஒவ்வொரு திருக்குலத்தார் மக்களுக்கு திருக்குலத்தார் திருப்பாத வழிபாடு செய்து வருகிறேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆனால் மதுரை சந்தையூர் பிரச்சினையில் அருந்ததியின மக்கள் _ பறையர் சமூக மக்களின் ஆதிக்க மனப்பான்மையால் _ இக்கொடுமை கண்டு -நாங்கள் முஸ்லீம்களாக மாறப் போகிறோம் என்ற அறிவிப்பு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.

களத்தில் பறையர் சமுதாய மக்களுக்கும் விடுதலை சிறுத்தைகளும் -அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல இயக்கங்கள் போராடுவது என்பது சரியான தீர்வை நோக்கி செல்லாது.

இந்த சந்தையூர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றி
அதில் குளிர் காய நினைப்பவர்
எவிடென்ஸ் – அமைப்பின் கதிர் என்ற கிறிஸ்தவர்.

மதுரை மாவட்ட ஆட்சியரும் – தமிழக அரசும் தெளிவான _உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க தயங்குவதும் – காலம் தாழ்த்தி வருவதும் இல்லாமல் உடனடியாக தலையிட வலியுறுத்தி கடந்த 17.03 2018 அன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அய்யா
திரு.முருகன் அவர்களிடம் மனு அளித்துள்ளோம்.

சட்டம் – நீதிமன்றம் .போராட்டம் – ஆர்பாட்டம் ….. இப்படி பல செய்தாலும் தீர்வுக்கு இரு தரப்பு மக்களும் -அந்த சந்தையூர் மக்கள் மகிழ்வோடு வாழ தாங்கள் இரு தரப்பினரையும் சந்தித்து பேசிட வேண்டி அன்புடன் அழைக்கிறேன் .

மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி – அனைத்து மக்களின் உரிமைகளும் – உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.

நன்றி

என்றும்
தங்கள்
இராம. இரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories