தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

evm kejriwal - 2026

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்தால் சத்தமே இல்லாமல் அப்படியே அடங்கிவிடுகின்றன.

உதாரணத்துக்கு கடந்த 2015 ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக பிப்ரவரி 04 ம் தேதி புகார் தெரிவித்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

ஆனால் அதன் பிறகு பிப்ரவரி 07 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 10 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.

அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிதான் வென்றது.ஆட்சியமைக்கும் என்று பெரிதும் சொல்லப்பட்ட பாரதிய ஜனதா வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றிபெற முடியும் என்றால் பாரதிய ஜனதாதானே அந்த தேர்தலில் வென்றிருக்க வேண்டும்?குறைந்தபட்சம் ஒரு கவுரமான எண்ணிக்கையிலான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டுமே?இப்படி படுதோல்வியடைய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இந்த குற்றசாட்டை எழுப்பிய அர்விந்த் கேஜ்ரிவால் அது குறித்து பின்னர் பெரிதாக சத்தமே காட்டவில்லை.

அண்மையில் மத்யபிரதேஷ்,சட்டீஸ்கட் மற்றும் இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.அங்கெல்லாம் வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை.ஆனால் தெலங்கானாவில் தோல்வியடைந்து. உடனே தெலங்கானாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் தங்களின் தோல்விக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும்.எனவே தேர்தல் ஆணையத்தையும் வாக்குப்பதிவு இயந்திரத்தையும் குறை சொல்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளன.

நாளை ஒருவேளை பாரதிய ஜனதா தோல்வியடைந்தால் இதே குற்றச்சாட்டை முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதில் அடிப்படை முகாந்திரமும் இல்லை.

தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பேயில்லை என்பதை 200% உறுதியாக கூறமுடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories