December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்துக்குள் மறைக்க வேண்டும்?!

srikrishnapremiswami srivijeeyar - 2025

ஸ்ரீ ஸ்ரீ பரனூர் மஹாத்மா க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அத்திவரதர் விஷயமாகத் தம்முடைய ஒரு கருத்தைச் சொல்லுகிறார்.. அக்கருத்தினை ஆதரித்து ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமி ஒரு பேட்டி கொடுக்கிறார்.. இவ்வளவு தான் நடந்தது !

உடனே ஸ்ரீ டிசி ஸ்ரீநிவாஸன், ஸ்ரீ டிஈ ஸ்ரீநிவாஸன் போன்ற மஹாநுபாவர்கள் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள் !

தாங்கள் ‘நாராச வார்த்தை வியாபாரிகள்’ என்பதனை மீண்டும் மீண்டும் எத்தனை முறை தான் நிரூபிப்பார்களோ இவர்கள் !

இத்தனை வயதான பின்பும் இவர்கள் பக்குவமடையாதவர்களாய்; முழுமை பெறாதவர்களாய் இருப்பது வேதனையாகத் தான் இருக்கிறது.

பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமியின் கருத்தோ; ஸ்ரீ ஜீயர் ஸ்வாமியின் கருத்தோ அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற நிர்ப்பந்தமில்லை !

அவர்கள் கருத்துகளில் அடியேனுக்கும் உடன்பாடில்லை தான்.. அதற்காக அரை டிரவுசர் சிறுவர்களைப் போலே அவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கப் புறப்படமாட்டேன்..

ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் புதைக்க வேண்டாம் என்று சொல்லியதில் புதைக்க என்ற சொல் ரொம்ப கேவலமானதாம் !

ஜீயரும் அப்படியே சொல்லுகிறார் க்ருஷ்ணப்ரேமியும் அப்படியே சொல்லுகிறார்.. இவர்களுக்குப் பேசத் தெரியாதா அது இது என்று மாகனம் & பார்ட்டி ஏகத்துக்கும் குதிக்கிறார்கள்..

நிச்சயமாக உங்களளவிற்குத் தரம் தாழ்ந்த கொச்சையான வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் செய்யவில்லை தான்..

அவர்களுக்கு வகுப்பெடுக்கப் புறப்படுகிற திருமுக மண்டலங்கள் தங்கள் பின்புறங்களைக் கழுவாமலே காறி உமிழ வந்து விட்டன ! கலிகோலாஹலம் என்பது இது தான் !

அத்திவரதர் உயிரோட்டமிருக்கிற ஒரு சாமி ! இத்தனை வெள்ளம் மக்கள் லட்சோபலட்சமெனக் கூடி அவனை வணங்குவதே அவன் உயிருள்ளவன் என்பதற்கு சாட்சி எனவே உயிரற்றவனைப் போலே அவனைக் கருதி தண்ணீருக்குள் புதைக்காதீர்கள் என்று பொருள்படும்படியாகத் தான் ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமியும் ஜீயர் ஸ்வாமியும் பேசியுள்ளார்களே தவிர , சிலர் வகுப்பெடுத்து ; அதுவும் நாகரிகப் பேச்சென்றால் வீசம் என்ன விலை என்று கேட்கும் வீணர்களிடம் பயில வேண்டிய நிலையில் அவர்களை இறைவன் வைக்கவில்லை !

akkarakkani srinidhi - 2025
அக்காரக்கனி ஸ்ரீநிதி

பெருந்தனம் புதைக்கப்பட்டிருந்தால் அதனைப் புதையல் என்கிறோம் ! ‘தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா: … என்ற உபநிஷத்தும், ‘அந்தர் ஹிதோ நிதிரஸி த்வமஶேஷ பும்ஸாம்’ என்ற ஆழ்வானும், தேவகியின் வயிறாகிற சுரங்கத்தில் இருந்த புதையல் கண்ணன் என்ற லீலா ஶுகரும் கூட இவர்களுடைய ஏச்சுக்கு ஆளாவர்கள் போலும் !

மாகனம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் அவர்கள் மனம் வந்து எப்படித் தான் எழுதினாரோ அறியோம்.. ஸ்ரீ ஸ்ரீ பரனூர் மஹாத்மா க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸநாதந தர்மிகளால் ‘அண்ணா ‘ என்றே வாஞ்சையுடன் அழைக்கப்படுகிறவர்..

நம் தர்மத்தை, இதிஹாஸ புராணங்களை ஶுக ப்ரஹ்மத்தைப் போலே ஸூத பௌராணிகரைப் போலே பலருக்கும் உபதேசித்து வரும் பெருந்தகை. ஆர்ஜவ குணமுடைய மஹாத்மாக்களில் ஒருவர் என்னத் தகுந்தவர் ! அவரை மாகனம் ஸ்ரீ டிசி எஸ் எப்படிச் சொல்லுகிறாரென்பதை அவர் வார்த்தைகளாகவே தருகிறேன் !

‘ கதைசொல்லி க்ருஷ்ணபிரேமியும் புதைக்க வேண்டாம் என்றே சொல்லுகிறார்.. அவரையல்ல அத்திவரதரை ..’ இப்படிப் போகிறது அவருடைய பதிவு..

90 வயதை நெருங்கும் ஒரு பெரியவர்.. நம் தர்மத்தின் தூணென நிற்பவர்.. அவரை இந்தப் பெரியார்கள் விமர்சித்திருக்கிற அழகைப் பாருங்கள் ! மஹான்கள் புதையுண்டால் நம் தர்மமும் புதையுண்டொழியும் ! யாரைப் பற்றி என்ன பேசுகிறோம் என்கிற பொறுப்புணர்ச்சி கூட இல்லாத நரர்களுக்கு வயது கூடுவதால் மட்டும் என்ன ஏற்றம் வந்து விடப்போகிறது !

தலைவர் போக்கு இப்படியென்றால்; செயலாளர் போக்கு இன்னும் மோசம் ! கேவலமான ஆடியோ பதிவுகளால் ‘சுருட்டுப் புகை’ விட்டுச் சுய இன்பம் காண்கிறார் அவர் !

பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் & ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் ஆற்றிவரும் பணிகளில் நூற்றில் ஒரு பங்கு கூட நீங்கள் செய்ததுமில்லை & செய்யப்போவதுமில்லை ! நல்ல புத்தி இல்லை என்பது பெருங்குறை தான்.. அதற்காக நல்லவர்களைப் பழிக்காதீர்கள் !

ஏற்கெனவே திருக்கதவங்களை அடைத்துக் கொண்டிருக்கிறான் பேரருளாளன்.. அவன் பாகவத அபசாரத்தைப் பொறுக்ககில்லான் !

‘மத்பக்தம் ஶ்வபஶம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: பத்மகோடி ஶதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே ‘ என்றவனிறே அவன் !

கருத்து: – அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி

2 COMMENTS

  1. Dravidian one hero’s wife and another saw the god. Do not bury the god.these Dravidian hero’s will export to USA via ship owned by their friends. Please keep god in public and daily people should watch not being exported.

  2. I agree with the views of Krishna Premi swamy and Jeer swamigal that Athi Varadar Swamy who attracted lakhs of people should be permanently installed in a separate Sannidhanam in Varadaraja Perumal Temple! He has proved to be quite a phenomenon! The general public would definitely want to have His Darshan everyday!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories