பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!

“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”

(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)

( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா17861559 1517108385000988 5242240015705989905 n 3 - 2026

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் முகாம். பெரியவா தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது. ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு, “அந்த வெத்தலையை எடுத்து பத்திரமா வைத்திருக்கம்படி சொன்னார்கள்.

சிஷ்யருக்குக் குழப்பம்.

வெற்றிலை ஒரு மங்கள பொருள் என்பதால்,மக்கள் காலில் மிதிபட்டு வீணாகப் போகவிடக் கூடாது என்பது பெரியவா எண்ணமா இருக்கலாம். அது சரி…..ஆனால், “பத்திரமா வெச்சுக்கோ! “……இது தான் புரியவில்லை -சிஷ்யருக்கு.

. அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தினல் , ஒரு பெண் ரொம்ப ஸ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள், கூட்டத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு அவளால் வர முடியவில்லை.. ஆனால் அருகில் சென்று, பெரியவாளை பார்த்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.

பெரியவா யாரும் எதிர்பாராதபோது, கூட்டத்தினுள்ளே நுழைய முற்பட்டார்கள். . உடனே எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள். பெரியவா அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார். சிஷ்யரிடம் ஏதோ சமிக்ஞை !

“என்னம்மா? எந்த ஊர்? என்ன பேரு?”.. சிஷ்யர் கேட்டார்.

“…..சின்னப் பொண்ணுு”

“உன் பேர் என்னம்மா?..”

“என் பேர்தாங்க சின்னப் பொண்ணுு”

பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை ஆசிர்வதித்தார்கள்.. பின் சிறு குறிப்புத் தோன்ற் சிஷ்யரைப் பார்த்தார்கள்………சிஷ்யர் பத்திரமாக வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாள்.

“ரொம்ப் நன்றி!” என்று சொல்லத் தெரியாத பெண்மணி.ஆனால், நன்றி உணர்ச்சி உள்ளத்தில் பெருகிக் கொண்டிருக்கிறதே? இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நெஞ்சார்ந்த நன்றியுடன், பெரியவா திரும்பிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள்.

அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் வெற்றிலை?

சின்னப் பொண்ணுு, நிறைமாத கர்ப்பிணி ! பெரியவாளை எப்படியாவது தரிசனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள். ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது. யாரிடம் சொல்வது?

இந்த அவஸ்தை நீங்க, ஒரு வெற்றிலை இருந்தால் போதும். யார் கொடுப்பார்கள்? தட்டு தட்டாக பழங்கள், பந்து பந்தாக மலர்ச் சரங்கள் பல பக்தர்களுடைய கைகளில், ஆனால் ஒருவர் தட்டிலும் வெற்றிலையைக் காணோம்!.,

தட்டில் இல்லாத வெற்றிலை தரையில் காணப்பட்டது எப்படி?

சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?

இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories