December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!

“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”

(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)

( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா17861559 1517108385000988 5242240015705989905 n 3 - 2025

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் முகாம். பெரியவா தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது. ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு, “அந்த வெத்தலையை எடுத்து பத்திரமா வைத்திருக்கம்படி சொன்னார்கள்.

சிஷ்யருக்குக் குழப்பம்.

வெற்றிலை ஒரு மங்கள பொருள் என்பதால்,மக்கள் காலில் மிதிபட்டு வீணாகப் போகவிடக் கூடாது என்பது பெரியவா எண்ணமா இருக்கலாம். அது சரி…..ஆனால், “பத்திரமா வெச்சுக்கோ! “……இது தான் புரியவில்லை -சிஷ்யருக்கு.

. அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தினல் , ஒரு பெண் ரொம்ப ஸ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள், கூட்டத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு அவளால் வர முடியவில்லை.. ஆனால் அருகில் சென்று, பெரியவாளை பார்த்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.

பெரியவா யாரும் எதிர்பாராதபோது, கூட்டத்தினுள்ளே நுழைய முற்பட்டார்கள். . உடனே எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள். பெரியவா அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார். சிஷ்யரிடம் ஏதோ சமிக்ஞை !

“என்னம்மா? எந்த ஊர்? என்ன பேரு?”.. சிஷ்யர் கேட்டார்.

“…..சின்னப் பொண்ணுு”

“உன் பேர் என்னம்மா?..”

“என் பேர்தாங்க சின்னப் பொண்ணுு”

பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை ஆசிர்வதித்தார்கள்.. பின் சிறு குறிப்புத் தோன்ற் சிஷ்யரைப் பார்த்தார்கள்………சிஷ்யர் பத்திரமாக வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாள்.

“ரொம்ப் நன்றி!” என்று சொல்லத் தெரியாத பெண்மணி.ஆனால், நன்றி உணர்ச்சி உள்ளத்தில் பெருகிக் கொண்டிருக்கிறதே? இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நெஞ்சார்ந்த நன்றியுடன், பெரியவா திரும்பிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள்.

அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் வெற்றிலை?

சின்னப் பொண்ணுு, நிறைமாத கர்ப்பிணி ! பெரியவாளை எப்படியாவது தரிசனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள். ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது. யாரிடம் சொல்வது?

இந்த அவஸ்தை நீங்க, ஒரு வெற்றிலை இருந்தால் போதும். யார் கொடுப்பார்கள்? தட்டு தட்டாக பழங்கள், பந்து பந்தாக மலர்ச் சரங்கள் பல பக்தர்களுடைய கைகளில், ஆனால் ஒருவர் தட்டிலும் வெற்றிலையைக் காணோம்!.,

தட்டில் இல்லாத வெற்றிலை தரையில் காணப்பட்டது எப்படி?

சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?

இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories