February 22, 2026, 12:04 PM
29.6 C
Chennai

பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!

“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”

(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)

( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா17861559 1517108385000988 5242240015705989905 n 3 - 2026

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் முகாம். பெரியவா தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது. ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு, “அந்த வெத்தலையை எடுத்து பத்திரமா வைத்திருக்கம்படி சொன்னார்கள்.

சிஷ்யருக்குக் குழப்பம்.

வெற்றிலை ஒரு மங்கள பொருள் என்பதால்,மக்கள் காலில் மிதிபட்டு வீணாகப் போகவிடக் கூடாது என்பது பெரியவா எண்ணமா இருக்கலாம். அது சரி…..ஆனால், “பத்திரமா வெச்சுக்கோ! “……இது தான் புரியவில்லை -சிஷ்யருக்கு.

. அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தினல் , ஒரு பெண் ரொம்ப ஸ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள், கூட்டத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு அவளால் வர முடியவில்லை.. ஆனால் அருகில் சென்று, பெரியவாளை பார்த்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.

பெரியவா யாரும் எதிர்பாராதபோது, கூட்டத்தினுள்ளே நுழைய முற்பட்டார்கள். . உடனே எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள். பெரியவா அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார். சிஷ்யரிடம் ஏதோ சமிக்ஞை !

“என்னம்மா? எந்த ஊர்? என்ன பேரு?”.. சிஷ்யர் கேட்டார்.

“…..சின்னப் பொண்ணுு”

“உன் பேர் என்னம்மா?..”

“என் பேர்தாங்க சின்னப் பொண்ணுு”

பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை ஆசிர்வதித்தார்கள்.. பின் சிறு குறிப்புத் தோன்ற் சிஷ்யரைப் பார்த்தார்கள்………சிஷ்யர் பத்திரமாக வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாள்.

“ரொம்ப் நன்றி!” என்று சொல்லத் தெரியாத பெண்மணி.ஆனால், நன்றி உணர்ச்சி உள்ளத்தில் பெருகிக் கொண்டிருக்கிறதே? இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நெஞ்சார்ந்த நன்றியுடன், பெரியவா திரும்பிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள்.

அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் வெற்றிலை?

சின்னப் பொண்ணுு, நிறைமாத கர்ப்பிணி ! பெரியவாளை எப்படியாவது தரிசனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள். ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது. யாரிடம் சொல்வது?

இந்த அவஸ்தை நீங்க, ஒரு வெற்றிலை இருந்தால் போதும். யார் கொடுப்பார்கள்? தட்டு தட்டாக பழங்கள், பந்து பந்தாக மலர்ச் சரங்கள் பல பக்தர்களுடைய கைகளில், ஆனால் ஒருவர் தட்டிலும் வெற்றிலையைக் காணோம்!.,

தட்டில் இல்லாத வெற்றிலை தரையில் காணப்பட்டது எப்படி?

சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?

இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories