லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சை மொச்சை பிரியாணி!

green morcha piriyani
green morcha piriyani

அவரெக்காளு பிரியாணி
தேவையான பொருட்கள்
அவரெக்காளு (பச்சை மொச்சை) – அரை கப்
பாசுமதி அரிசி – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2 (சிறியது)
வெங்காயம் – ஒன்று (பெரியது)
தக்காளி – ஒன்று (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தயிர் – 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் – ஒரு கப் (விரும்பினால்)
பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா – சிறிது
வறுத்து பொடிக்க:
பட்டை – ஒரு துண்டு
லவங்கம் – 3
மிளகாய் வற்றல் – 3
தனியா – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 3
தாளிக்க:
பிரிஞ்சி இலை – ஒன்று
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – சிறு துண்டு
நெய், எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை
அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். மொச்சையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாகவும், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.

வெறும் வாணலியில் சீரகம், பட்டை, லவங்கம், மிளகாய் வற்றல், தனியா மற்றும் கடலைப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். கடைசியாக பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வறுத்து பொடி செய்த மசாலா, பிரியாணி மசாலா மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மொச்சையைச் சேர்த்து, மசாலா மொச்சையுடன் சேரும்படி நன்கு பிரட்டிவிட்டு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப் தேங்காய் பால் + ஒரு கப் நீர் ஊற்றவும். (அல்லது) 2 கப் நீர் மட்டும் ஊற்றி கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துவிட்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேகவிடவும்.

முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான அவரெக்காளு பிரியாணி தயார்.

உருளைக்கிழங்குடன் கேரட், பீன்ஸ் போன்ற காய்களும் சேர்க்கலாம். தண்ணீரின் அளவு நீங்கள் பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப சேர்க்கவும். கொத்தமல்லித் தழை, புதினாவை தாளிக்கும் போதும் சேர்க்கலாம். வாசம் அருமையாக இருக்கும்.

இஞ்சி, பூண்டு சேர்த்த பிறகு அதிகமாக அரைக்க வேண்டாம். வறுத்த மசாலா நன்றாக பொடியானதும் இவற்றை சேர்த்து லேசாக ஒரு சுற்று அரைத்து எடுத்தாலே போதும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories