December 6, 2025, 11:04 AM
26.8 C
Chennai

ஆன்லைன் வகுப்பு: கட்டணம் செலுத்தாத மாணவர்களை விலக்கிய நிர்வாகம்!

online - 2025

திண்டுக்கல்லில் ஊரடங்கின் போது கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஐந்தாம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளி நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நத்தம் சாலையில் பொன்னகரம் பகுதியில் சௌந்தரராஜா வித்யாலயா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது . கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்த நிலையில் 2021- 2022 ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் பெற்றோர்கள் உடனடியாக இந்த பருவத்திற்கான முழு கல்வி கட்டணமாக சுமார் 27 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என குறுந்தகவல் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத சௌந்தரராஜா வித்யாலயா பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புக்கு கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஐந்தாம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து திடீரென நீக்கிஉள்ளது .

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி செயல்படாத நிலையில் பேருந்து கட்டணம், விளையாட்டு கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்தே வசூலிப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories