இங்கிதம் பழகுவோம்(9) – எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்!

ingitham 9 - 2026

ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன்.

அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர்.

40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு இரவு ஷிஃப்ட் என்பது பொதுவாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்திலேயே 24 மணிநேர பணிச் சுழற்சியில் பணியாற்றி எங்களுக்கெல்லாம் முன் உதாரணமானவர்.

அம்மா அப்பா இருவரின் பணியுட மாற்றம் காரணமாய் பல்வேறு ஊர்களில் வசிக்கும் அனுபவம். எந்த ஊரில் எங்கிருந்தாலும் அடுத்த ஒரு மாதத்தில் வீட்டில் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, பவழமள்ளி, ரோஜா, செம்பருத்தி, இன்சுலின் செடி, நிலவேம்பு செடி, வெப்பம் செடி, சோற்றுக்கற்றாழை, மணிப்ளாண்ட், பாகற்காய் கொடி, பச்சைமிளகாய், பிரண்டை என இருக்கின்ற இடைவெளிகளில் எல்லாம் செடி கொடிகள் வந்துவிடும்.

சமையல் அறை முழுவதும் இயற்கை உணவுப் பொருட்கள், நாட்டு மருந்துகள், வீட்டு வைத்தியம் என வீடே சொர்க்கம்தான்.

இவை எல்லாவற்றையும்விட ஒரு பெரிய சிறப்பு அம்மாவிடம் உண்டு. ஆம். அம்மா ஆகச் சிறந்த படிப்பாளி. நிறைய படிப்பார். படிப்பதில் பிடித்ததை கட் செய்துவைப்பார். எங்கள் கைகளால் அப்பாவுடன் அமர்ந்து பைண்டிங் செய்வதுதான் அந்தக் காலத்தில் எங்கள் பொழுதுபோக்கே.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

கல்கி, ஜெயகாந்தன் புத்தகங்கள் முதல் சமகால இலக்கியம் வரை கிடைக்கும் இடங்களில் எல்லாம் புத்தகங்கள். மளிகை சாமான் கட்டிவரும் பேப்பரில் உள்ள செய்திகளைக் கூட விட மாட்டார். படித்துவிடுவார்.

படிப்பது மட்டுமல்ல, சேகரிப்பது, தேவைப்பட்டால் குறிப்பெடுப்பது அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு கேட்ட நேரத்தில் தகவல்களைச் சொல்வது என அம்மா ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா.

இப்போது அம்மா  பிளாக், ஃபேஸ்புக், இமெயில், கிண்டில் புத்தகங்கள் என தொழில்நுட்ப ரீதியாக எல்லாவற்றிலும் UPDATE.

ஆனால் அம்மா ரொம்ப ரொம்ப எளிமை. கல்யாணத்துக்குச் சென்றாலும், ஆஃபீஸுக்குச் சென்றாலும் ஒரே மாதிரி பாணியில்தான் ஒப்பனை. ஆகச் சிறந்த அறிவாளி. ஆனால் அறிவாளித்தனம் ஆடையில் வெளிப்படாது. பேச ஆரம்பித்தால் அருவியாய் கொட்டும்.

இதையெல்லாம் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

பரிசோதனையும், தேவையான மருத்துவமும் முடிந்தபிறகு மருத்துவர் பல் சம்மந்தமான விவரக் குறிப்புகள் அடங்கிய ஒரு இன்ஸ்ட்ரக்‌ஷன் ஷீட்டை அப்பாவிடம் கொடுத்தார்.

அம்மா வாயில் பஞ்சு இருந்ததால் அவரால் பேச முடியலை. ஆனால் அம்மாவுக்குத்தான் காகிதத்தைப் பார்த்து விட்டால் கையும், மனசும் பரபரக்குமே… ‘என்னிடம் கொடுங்கள்’ என கைகளை அசைத்துக் கேட்க, மருத்துவர் ‘அந்த ஷீட்டில் உள்ளவை ஆங்கிலத்தில் பிரிண்ட் ஆகி இருக்கு…’ எனச் சொன்னார்.

அம்மா ஒன்றும் சொல்லாமல் முக பாவனையையும் மாற்றிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார், கொஞ்சம் டென்ஷனான என்னையும் அமைதியாக இருக்கச் சொல்லி சைகை காட்டினார்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

ரிசப்ஷனுக்கு வந்து மருத்துவ கட்டணம் செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த மருத்துவர் எங்களை கடந்து சென்றார். எங்களைப் பார்த்து, ‘3 மாதங்களுக்குப் பிறகு புதிதாக ஒரு பல் கட்டிக்கொண்டால் மேலுள்ள பல் கீழ் இறங்காது…’ எனச் சொன்னார்.

அம்மா ஏதோ நினைத்துக்கொண்டவராய் ஒரு பேப்பர் வாங்கி அதில் ‘I will goto USA for a short trip to attend a family function at my daughter’s house… I will Back to chennai after 6 months…’ எனத் தொடங்கி ஆறுமாதம் கழித்து வருகிறேன் என்று தன் அழகான கையெழுத்தினால் எழுதிக்காட்ட அந்த டாக்டர் முகம் வெளிறிப் போனது.

அம்மாவின் எளிமையைப் பார்த்து அவருக்கு ஆங்கிலம் தெரியாது என தானாகவே ஒரு கற்பனையை செய்துகொண்டு அவர் பேசியவை உறுத்தலாய் அவர் முகத்தில்.

எளிமையாக இருந்தால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது, ஆங்கிலம் தெரியாது, தொழில்நுட்பம் தெரியாது என அவரவர்கள் தானாகவே நினைத்துக்கொள்வது ஒரு மாயை.

இதுபோன்ற குறைவான / மிகையான மதிப்பீடுகள் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆண்களுக்கும் உண்டு. அவை குறித்தும் பேச இருக்கிறேன்.

மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்போமே. அவர்களின் உடையை வைத்து, தோற்றத்தை வைத்து, வைத்திருக்கும் வாகனத்தை வைத்து எடைபோடுவது தவறு என்பதை நாம் உணர வேண்டும். குறைத்துக்கொள்ளலாமே.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்!

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…




bhuvaneswari compcare - 2026காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

2 COMMENTS

  1. எப்போது எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே தெளிவான பதில் வரும். எனக்கு ஆரம்ப நிலையில்கணிணி சம்பந்தமாய்ப் பல ஐயங்களுக்கு விடை தந்தவர்.

  2. அற்புதமான பதிவை அழகான நடையில் கொடுத்திருக்கிறீர்கள். பயனுள்ள பதிவு. இதுபோல் நிறைய உங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கு பகிரலாமே. பயனுள்ளதாக இருக்குமே,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories