நாட்டுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டும் திருமுருகன் காந்தி: ஏபிவிபி குற்றச்சாட்டு

abvp pritviraj - 2026

மாணவர்களை தேசத்திற்கு எதிராகத் தூண்டி விருகிறார் திருமுருகன் காந்தி என்று குற்றம் சாட்டியுள்ளது ஏபிவிபி மாணவர் அமைப்பு!

கடந்த 19ஆம் தேதி லயோலா கல்லூரியில் வீதி விருது விழா என்ற நிகழ்ச்சியில் திருமுருகன் காந்தி, கல்லூரிக்குள் அரசியல் பேசக் கூடாது என்று அரசாங்கம் சுற்றறிக்கை விட்டிருக்கிறது. மாணவர்களிடம் பேசாமல் பிறகு யாரிடம் பேசுவது? படிப்பினைப் பிறகு கூட படித்துக் கொள்ளலாம், அரசாங்கத்தை எதிர்த்து உடனே போராட வா என்பதாக அழைப்பு விட்டு பேசியிருக்கிறார்.

அவர் பேசிய இந்தப் பேச்சுக்களுக்காக கண்டனம் தெரிவித்துள்ளது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு. அதன் மண்டல அமைப்புச் செயலாளர் பிரித்விராஜ் இது குறித்துக் கூறியபோது…

மாணவர்களுக்கு படிப்பை விட முக்கியமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அரை குறை அறிவினை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வருவது நாட்டையும் நாட்டு மக்களையும் கெடுத்து விடும். படிப்பே இல்லாமல் அரசியலில் நல்லது செய்த தலைவர்களை முன்னுதாரணம் காட்டி சமாதானம் செய்யக் கூடாது.

எல்லாரும் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், கக்கன் போல இயல்பிலேயே நிர்வாக அறிவுடன் இருந்து விட முடியாது. அதுவும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட அரசியல் மற்றும் வர்த்தகச் சூழ்நிலையில் அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் இருப்பதற்கு நிறைந்த கல்வியறிவும், பரந்த பார்வையும் மிகவும் அவசியம்.

இன்றைய சூழலில் பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதும் மதிப்பெண்ணுக்காக கழித்துவிட்ட மாணவர்களுக்கு பொது அறிவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாகத்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இவர்களை படிப்பினையும் முடிக்காமல் அரசியலுக்குள் இறக்கிவிட்டால், அவர்கள் வாழ்வு சீரழிந்துவிடும். இது ஏதோ மாணவர்கள் வாழ்க்கையைச் சிதைக்கத் திட்டமிட்டே பேசுவதாக இருக்கிறது.

கல்லூரிகளுக்குள் அரசியல் பேசக் கூடாது என்ற நிபந்தனை இருக்கும் பொழுது திருமுருகன் காந்தி லயோலா கல்லூரிக்குள் காழ்ப்பரசியல் பேசி, மாணவர்களை தேசத்திற்கு எதிராகத் திசை திருப்ப முனைவதை ஏபிவிபி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தப் பேச்சுக்காக திருமுருகன் காந்தி உடனடியாக நிபந்தனை யற்ற மன்னிப்பை மாணவர் சமுதாயத்திடம் கேட்கவேண்டும் என்றும் இந்தப் பேச்சைக் கவனத்தில் கொண்டு திருமுருகன் காந்தி மீது அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏபிவிபி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories