தினசரி ஒரு வேத வாக்கியம்: 12- தீஞ்சொல் சகவாசம்!

vedavaakyam

12. தீஞ்சொல் சகவாசம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ந துருக்தாய ஸ்ப்ருஹயேத்”
– ருக் வேதம் 

“தீஞ்சொல் பேசுபவர்களோடு தொடர்பு கூடாது”

ஸ்ருதி, ஸ்மிருதி, புராணம் மற்றும் இதிகாசங்களில் பேச்சுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சொல்லின் பண்பாட்டை விளக்கும் இனம் மிகவும் நாகரீகம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வேதங்களில் பேசும் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று பல இடங்களில் விவரித்துள்ளார்கள்.

“வாக்கி சர்வஸ்ய காரணம்”

அனைத்திற்கும் பேச்சே காரணமாகிறது என்பது நம் முன்னோர் கூற்று. 

உண்மையாக, அன்பாக, இதமாக, சாஸ்திர படிப்பு மூலம் கிடைத்த பண்பாட்டோடு பேச முடிந்தால் அது ‘வாசிக தபஸ்’  ஆகிறது என்பது கீதாசார்யன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.  

அனுமனின் பேச்சின் உயர்வை வால்மீகி மகரிஷி இனிமையாக வர்ணிக்கிறார். செயல்திறனோடு பேசி காரியத்தை சாதிப்பது சிறந்த இயல்பு. 

பேச்சு நட்போடு கூடியதாக, மங்களகரமாக, மிருதுவாக இருந்தால் எடுத்த பணி சிறப்பாக முடியும் என்று நம் புராதன ருஷிகள் பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

கத்தியை எடுத்த எதிரியைக் கூட நண்பனாக மாற்றும் விதமாக மிருதுவாக இனிமையாக நட்போடு உரையாடும் சத்தியசீலனாக அனுமனைப் புகழ்கிறான் ராமன். ராமனும் சாஸ்திர அத்யயனத்தினால் பண்பட்ட சொற்களால் பிரியமாக, இதமாக, சத்தியமாக, புன்சிரிப்போடு பேசும் ‘வாக்விசாரதர்’ என்று   ராமாயணத்தில் வர்ணிக்கப்படுகிறான்.

உண்மையே பேசினாலும் அதனை மிருதுவாக நட்பாக பேச வேண்டும். இது காரிய சாதனையின் நோக்கம். பலன் கெடாமல்,  பணியை நிறைவேற்றும் நோக்கோடு உரையாடுபவர் தன்னையும் தன் சொற்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர்.

மனித உறவுகளுக்கு பேச்சு ஒரு முக்கியமான  தொடர்புக் கருவி. பண்பாடு இல்லாமல், தெளிவில்லாமல், அறிவில்லாமல், பௌருஷமாகவும் ஆபாசமாகவும் பொய்யாகவும், பிறர் மனதை நோகடிக்கும் விதமாக வஞ்சனையும் கபடுமாக ஆத்திரப்பட்டு எடுத்தெறிந்து குத்திக்காட்டி திட்டி மரியாதை குறைவாக பேசும்  சொற்களையே ‘துருக்தம்’ என்கிறது இந்த வேதவாக்கியம்.

சிலர் இந்த ‘துருக்தா’வை மட்டுமே தம் குணங்களாகக் கொண்டிருப்பர். அவர்களுடைய சகவாசத்தினால் பிறருடைய பணிகளும் உள்ளமும் கூட கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.

அதனால்தான் மனித உறவுகளில் ‘துருக்தர்’களான தீஞ்சொல் பேசுபவர்களிடமிருந்து தூரமாக விலகி இருக்கச் சொல்லி வேதமாதா எச்சரிக்கிறாள்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

வாயை கட்டுப்படுத்த இயலாத வாய்த் துடுக்குத்தனம் கூட ‘துருக்த’ குணமே. கடவுளையும் ரிஷிகளையும் சாஸ்திரங்களையும் நிந்திக்கும் சொற்களை பயங்கரமான பாவ வாக்குகளாக ‘சத்திய தரிசி’கள் கணக்கிடுகின்றனர். 

நாவினால் பாவம்  செய்பவர்களின் சகவாசத்தால் தர்ம மயமான வாழ்க்கையில் இருந்து வழுவ நேருகிறது. நிந்தைகளைக் காதால் கேட்பது  கூட பாவத்தில் ஒரு வகையே. அதனால்தான் ‘பத்ரம் கர்ணோபி: ஸ்ருண்யாம’ என்கிறது உபநிஷத்து. ‘காதுகளால் சுபமான வசனங்களையே கேட்போமாக!’ என்ற விருப்பத்தை ரிஷிகள் வெளிப்படுத்துகிறார்கள்.

சு+ உக்தம் =சூக்தம். இனிமையான சொற்களைப் பேசும் பண்பாடு உள்ளவர்களே மேதாவிகளாகவும் முக்கிய பதவிகளிலும் விளங்கினால் சமுதாயத்தில் வெறுப்புகளும் வேற்றுமைகளும் இருக்காது. அழகான சூழ்நிலை நிலவும்.

தீஞ்சொல் பேசுபவர்  இருக்கும் இடத்தில் அமைதியும் சமரசமும் நிலவாது. சமுதாய நன்மை கோரும் வேத ரிஷிகள் ‘துருக்த’ங்களை நாம் பேசாமல் இருப்பதோடு அவற்றை பேசுபவர்களை நம்மிடம் நெருங்க விடாமலும் இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories