துகடோஜி மஹாராஜ் சாடும் அறியாமையும், அலட்சியமும்!

tukadoji maharaj
tukadoji maharaj
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

மஹாராஷ்டிராவின் புகழ்பெற்ற துறவிகளில் ஒருவரான ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ், தன் பஜனைகளின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர் எழுதிய ‘கிராம் கீதா’ என்னும் நூல் மராட்டிய இலக்கிதத்தில் கீதையாகவே கருதப்படுகிறது. துகடோஜி மஹாராஜ், “கிராம் கீதா’ நூலில் கிராமத்தின் வளர்சிக்காக கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் இன்றும் நமக்கு வழிகாட்டுவதாய் உள்ளது.

ஜுன் 30-ந்தேதி துகடோஜி மஹாராஜின் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தற்போது உள்ள தொற்று நோயின் அபாயத்தை உலக மக்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொண்டுள்ளோம். துகடோஜி மஹாராஜ் தன்னுடைய ‘கிராம் கீதாவில்’ 14-வது அத்தியாயமான கிராம ஆரோக்கியத்தில் தொற்று நோய் பற்றியும், அச்சமயத்தில் மக்களின் அறியாமை குறித்தும் எழுதியுள்ளார்.

துகடோஜி மஹாராஜ், தொற்று நோயின் தாக்குதலை கூறும்போது ‘ நம்முடைய செயல்களே நமக்கு துன்பத்தை தருகிறது, நாமே நமக்கு எதிரி (ஷத்ரு ஆபனாச்சி ஆபுலே) ,’ என்கிறார். தற்போதைய கொரானா காலத்தில் நாம் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் நம் ஆரோக்கியத்திற்கே கெடுதல் ஏற்படுகிறது. நமக்கு நாமே எதிரியாகிறோம்.

இன்னொரு பத்தியில் ராஷ்டிரசந்த், தினசரி வாழ்வியலில் ஒருவரும் கூட முறையான வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதை சாடுகிறார். நோயாளிகள் எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புகிறார்கள், தொற்று நோயை பரப்புகிறார்கள், ஆயிரனானோர் பாதிப்படைகின்றனர்,என்கிறார்.
லாக்டவுனில் பொது இடங்களில் எச்சில் துப்பிய மனிதர்களை கட்டுப்படுத்த நம் காவலர்களின் முயற்சி எடுத்தது நம் நினைவில் இப்போது வருவதை நம்மால் தடுக்க முடியவில்லை.

கிராமமோ, நகரமோ மக்கள் சுத்தமாக இருப்பதில்லை. நோய்களாலும், தொற்றாலும் அவதிக்குள்ளாகின்றனர் , என்கிறார் துகடோஜி.

Tukadoji
Tukadoji

மக்கள் தாங்களே தங்கள் கடமையை உணர்ந்து ஆதர்ஷ் மனிதர்களாக செயல்பட்டு ஆரோக்கிய கிராமமாகவும், தொற்று நோயிலிருந்தும் தாமும் விடுபட வேண்டும், என்கிறார் அவர்.

கிராம் கீதையானது, ‘ கிராமத்தார் வழிமுறைகளை பின்பற்றினால், அவர்கள் வாழ்வு மலரும். கிராமும் தொற்று நோயிலிருந்து விடுபடும்,’ என்றும் விளக்குகிறது.

மக்கள் வழிநெறிகளை பின்பற்றினால், அவர்களின் செயல்களும் நன்மை பயக்குவதாய் அமையும். ஆனால், ஏதாவது சிறிய அறியாமையால் பல தவறுகள் தொடரும் என்று அருமையாய் விளக்குகிறார் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ்.

இவ்வாறு இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறு தன் கருத்துகளின் மூலமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே துகடோஜி மஹாராஜ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதில் மக்களின் பங்கை வலியுறுத்துகிறார்.

ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் மக்களின் ஆரோக்கியத்திற் காகவும் அதே அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்
” முறையாக தியானமும், காலை நடைபயிற்சியும் செய்தால் ஆக்ஸிஜன் பெற்று உடலும், மனமும் சுத்தமாக்க முடியும்,” என்கிறார்.

முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் – ஆகிய வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தும், நம் அறியாமையையும் நீக்கியும் ஆரோக்கியமானது ஒவ்வொரு இல்லத்தையும் தழுவ ஒத்துழைக்க வேண்டிய நேரமிது. அதுவே நம் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் போன்ற எண்ணிலங்கா துறவிகளின் கருத்துகளுக்கு கொடுக்கும் மரியாதை ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories