வந்தேறிகளின் வம்புப் பிரசாரம்! விளைவுகள்! உண்மைகள்! (பகுதி 17)

vantherikaL vambupracharam - 2026

வந்தேறிகளின் வம்புப் பிரச்சாரம்…! விளைவுகள்…! உண்மைகள்!
தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கோமாதா!

வந்தேறிகளின் பார்வை பிராமணர்களுக்கு அடுத்தபடியாக நம் தேசிய பசுக்களின் மேல் விழுந்தது.

“பாரதிய விவசாய முறைக்கு பசுக்களே ஆதாரம். பாரதிய விவசாய அமைப்பை நிர்மூலமாக்க வேண்டுமென்றால் ஒரே வழி பசுக்களை அழிப்பதே!” என்றான் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ராபர்ட் கிளைவ்.

அந்த நேரத்தில் 1760ம் ஆண்டு கல்கத்தாவில் முதல் பசுவதைக் கூடத்தை ஏற்படுத்தினான். ஒரு ஆண்டிற்குள்ளாகவே ஒரு கோடி பசுக்களுக்கு மேல் வதைத்துக் கொன்றதாக வரலாறு தெரிவிக்கிறது. 1910ம் ஆண்டில் 350 பசுவதைக் கூடங்கள் இரவு பகலாக பணி புரிந்து பாரத தேசத்தின் கோ செல்வத்தை நிர்மூலமாக்கின.

தங்களின் அட்டூழியங்களை மூடி மறைப்பதற்கு வந்தேறிகள் பல பொய்களை ஹிந்து சமுதாயத்திற்குள் பரப்பினர். பசுக்களும் மீதி விலங்குகளைப் போன்றதே என்றும் ரிஷிகள் கூட பசு மாமிசம் தின்றார்கள் என்றும் வந்தேறி ஆட்சியாளர் பசுக்களின் மேல் பண்டைக்காலம் முதல் இருந்து வரும் நிஷ்டையைக் குலைப்பதற்காக துஷ்பிரசாரம் செய்தனர்.

“இவ்விதமாக இயற்கை எருக்களான பசுஞ் சாணம், பசுவின் சிறுநீர் ஆகியவற்றின் இடத்தில் தொழிற்சாலை எருக்களான யூரியா, பாஸ்பேட் போன்றவை இடம் பிடித்தன. ராபர்ட் கிளைவின் தந்திரத்தின் மர்மம் இதுவே!” என்று “கோ ரக்ஷணை மூலமே தேசப் புனரமைப்பு” என்ற கட்டுரையில் திரு.எம்விஆர் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

பசு என்றால் ஹிந்துக்களுக்குத் தாய். கோ தானம் செய்வது என்பது ஹிந்துக்களுக்கு ஒரு பவித்திர காரியம். நல்லது கெட்டதுகளில் கடைபிடிக்கப்படும் செயல்களில் ஒரு பகுதியாக காளைகளை அவிழ்த்து விடுவதை புண்ணியமாக எண்ணினர். பண்டைக்காலம் முதலே நம் சமுதாய பொருளாதார வாழ்வு முறைக்கு பசு முதுகெலும்பாக இருந்து வந்தது. பாரத தேசம் விவசாய தேசம் என்பதால் பசுச் செல்வமே உண்மையான செல்வமாக கருதப்பட்டது. மகாபாரத காலத்தில் நடந்த பசுக்களைக் கவர்தல் என்றும் போர் முறைகளைப் பற்றி நாமறிவோம்.

ஆனால் பாலைவன மதங்களின் அசுரக் கும்பல் நம் பொருளாதாரச் செல்வமான பசுச் செல்வத்தைப் பார்த்து வியந்து போயின. வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினர். நம் தேசத்தின் விலங்குச் செல்வத்தைக் கண்டு அவர்களின் வாய் ஊறியது. கோ வதையை மிகக் கொடுமையான பாவச்செயலாக எண்ணிய நம் தேசத்திலேயே நம் கோமாதா அவர்களுக்கு உணவானது.

பாரத தேசத்தை ஆக்கிரமித்த ஈஸ்ட் இந்தியாவின் பிரிட்டிஷ் அதிகாரிகளும் பசுக்களை வெட்கமின்றி கொன்று குவித்தனர்.

“முகமதியர் செய்து வரும் கோ வதைகளுக்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இது ஆங்கிலேயர்களான நம்மை நோக்கி குறிவைக்கும் அம்பு! ஏனென்றால் நம் படையினரின் தேவைக்காக நாம்தான் அதிக அளவு ஹிந்துக்கள் பவித்திரமாக நினைக்கும் பசுக்களைக் கொல்கிறோம்” என்று ராணி விக்டோரியா 1893 டிசம்பரில் வைசிராய்க்கு கடிதம் எழுதினாள்.

1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு பசு ஒரு முக்கிய காரணமானது. 1880-94 இடையில் நடந்த மிகப் பெரும் போராட்டம் பசு வதைத் தடை குறித்து நடந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மாநாடுகளில் பங்குகொண்ட காந்திஜி, திலக், வினோபா போன்ற பெருந்தலைவர்கள், “தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தவுடம் முதலில் போடும் கையெழுத்து பசு வதை தடைச் சட்டத்திலேயே!” என்று கர்ஜித்தனர். ஆனால் விடுதலைக்குப் பின்னும் மக்களின் விருப்பம் நிறைவேறவில்லை. தேசிய பசுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருகிறது.

மருத்துவ குணம் மிக்க பஞ்சகவ்யம் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புத்திகூர்மையை அதிகரிக்கும் பசு நெய்யை பல மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சிறந்த பலனளிக்கும் தேசிய பசுக்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

அரசியல் சட்டம் பிரிவு 48ல் பசு வதைத் தடை உள்ளது. பசு மாமிசம் ஏற்றுமதி மீதும் தடை உள்ளது. ஆனாலும் நடைமுறையில் கோ வதையைத் தடை செய்ய இயலாமல் உள்ளோம்.

(நன்றி – ருஷிபீடம் – ஜூலை, 2018)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories