இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

srilanka prison jaffna - 2026

-K. அண்ணாமலை (தமிழ் மாநிலத் தலைவர், பாஜக.,)

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்னுடைய இலங்கை பயணம் தமிழக அரசு சார்பில் இல்லாமலும், இந்திய அரசு சார்பு இல்லாமல் தனிப்பட்ட முறையில் சில முக்கிய விடயங்களுக்காக நான் மேற்கொண்ட இந்த பயணம் உண்மையிலேயே மிக வெற்றிகரமாக அமைந்தது.

என்னுடைய பயணத்திற்கு முறை பயணத்திற்கு ஈடான ஊடக வெளிச்சம் தந்த பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலையும் அறிந்துகொள்ள என்னுடை பயணம் உதவிகரமாக இருந்தது

அறைக்குள் அமர்ந்து கொண்டு அயலகத் தமிழர்களின் அல்லல்களை ஆராய்வதை விட கண் கூடாகக் கண்டு திரும்பியது எனக்குள் மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களையும் நான் சந்தித்து திரும்பி இருந்தேன். அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களுக்கு ஆறுதல் மொழிகள் கூறி வந்தேன்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இலங்கைப் பயணம் குறித்த என்னுடைய விரிவான அறிக்கையை கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதிலே விடுதலை கிடைக்காமல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் விடுதலை குறித்தும் விரிவாக கூறியிருந்தேன். இந்திய அரசும் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அந்த மீனவர்களின் விடு­த­லைக்கு ஏற்­பா­டு செய்து நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

srilanka prison jaffna1 - 2026

எந்த சிக்கலாக இருந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்லாமல் அணுக்கத்தில் சென்று ஆராய்ந்து பார்க்கும்போது தீர்வுகள் தீர்க்கமாக புலப்படும்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான சூழலிலும் மீனவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விடுதலை நமது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று தான் நான் குறிப்பிட வேண்டும்.

இந்திய ராஜ தந்திர உறவுகளுக்கும் வெளியுறவு கொள்கைகளுக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்களையும் தமிழக மீனவர்களையும் மத்திய அரசு எத்துணை அக்கறையாக, எத்துணைக் கவனமாக, எத்துணைக் கரிசனமாக கையாளுகிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இலங்கை பல்வேறு வகையான சிக்கல்களில் சிக்கியிருக்கும் இந்த வேளையில், சரியான நேரத்தில் எடுத்த துல்லியமான, துரிதமான திட்டமிடலுக்காகவும் நடவடிக்கைகளுக்காகவும் மத்திய அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இலங்கையில் சிக்கியிருந்த தமிழக மீனவர்களை சட்ட சிக்கல் இல்லாமல் முயற்சி எடுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வெற்றிகரமான விடுதலைக்கு செய்த மாண்புமிகு மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் திரு முருகன் அவர்களுக்கும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படும்போதெல்லாம் தன்னுடைய உறவுகளும் சொந்தங்களும் பாதிக்கப்பட்டார் போல, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை அரசு ரீதியாக முன்னெடுக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு முரளிதரன் அவர்களுக்கும், தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளை வெற்றிகரமாக வடிவமைத்து, வெளிநாட்டுப் உறவுகளில் வித்தகம் காட்டி, சட்டரீதியான மீட்பு நடவடிக்கைக்கு வித்திட்ட வித்திட்ட மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கும், நம் நாட்டின் கடைக்கோடி குடிமகனின், நலத்திற்காக நாளெல்லாம் திட்டமிட்டு ஓயாது உழைக்கும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories