பாகிஸ்தானுடன் போர்… இக்காலச் சூழலில் தேவையற்றதே!

pakistan terror funding3 - 2026

பாகிஸ்தானுடன் போர் வேண்டுமா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்போர் கூட, போர் கூடாது என்றே சொல்வார்கள்.

காரணம், தற்போதைய போர்கள் conventional warfare அல்லது பழைய போர்முறையின் கீழ் வராது. காசுக்கு லொண்டி அடிக்கும் ஹவுதிகளே.. ரியாத் மீது மிஸ்ஸைலை சர் சர் என்று விடுகிறார்கள்.

என்னதான் ஓட்டாண்டியானாலும், தற்போது சவுதியிடம் சில்லரையை பெற்ற பாகிஸ்தான். அதை மதரஸா கல்விக்கு என்றோ, அல்லது ரோடு போடவோ என்றெல்லாம் கதைவிட்டு.. ராணுவத்திற்கும், பிதாயீன்களை உருவாக்கவுமே பயன்படுத்தப் போகிறது.

சரி போர் வராது.. வந்தால் என்று வைத்துக்கொள்வோம்..

பாகிஸ்தான் சோமாலியா ஆகும். ஏற்கெனவே அது லேசாய் அப்படித்தான். 1971 மாதிரியான சண்டையாக இருக்காது. நிறைய வான்வெளி தாக்குதல்கள்தான். பார்டர் தாண்டி இந்திய டாங்குகள் நுழைந்தால்.. அவர்கள்.. நியூக் தடவிய மத்தாப்புகளை போடுவோம் என்று நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் பதிலுக்கு நாலு நகரங்களை அழித்தால்.. அவர்கள் தில்லி மும்பை சென்னை, பெங்களூர்.. இப்படி நாலு பக்கமும் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி அடிப்பதை தடுக்க. இஸ்ரேலிடம் இருக்கும் டெக்னாலஜியை (IRON DOME) இந்தியா வாங்கி.. இந்தியா முழுக்க அமுல்படுத்துவது சாமான்யமானது அல்ல.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இதைவிட.. பாகிஸ்தானுடன் ஆண்டவனே சொன்னாலும்.. கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று 2 பாயின்டை விடலாம். ஒரு இழப்புமாகாது.

போர் என்று ஒன்று வந்தால்.. இழப்புகள் இந்தியாவிற்கு மிக அதிகமாக இருக்கும். போர் அறிவிப்பு ஒன்றே போதும்.. இந்திய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி முதல்.. இந்திய கரன்ஸி சென்சுரி போடும். பெட்ரோல் விலை 150 போகலாம். விலைவாசி மூன்று நான்கு மடங்கு ஆகலாம். வெளிநாட்டு முதலீடுகளை.. சடக்கென இழுத்துக் கொள்வார்கள். வட்டி ஏறும். பணவீக்கம் எகிறும்.

இதெல்லாம் போர் வரும் அறிவிப்பு வந்தாலே.! போரே வந்துவிட்டால்..?

பேரழிவு.. ராணுவத்தினருக்கும் வீடு, மனைவி, குழந்தை குட்டிகள் உண்டு.. அதை தாண்டி சிவிலியன்களின் இழப்பு.. பிசினஸ், வீடு, இன்னபிற அழியும். முன்னே மாதிரி.. விளக்கை அணைத்துவிடுங்கள்.. என்று சைரன் அலறினால்.. எதிரி ப்ளேன் பாம் போட முடியாமல் தடுமாறுவது எல்லாம் இல்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது துல்லியமாய் ஈஸ்வரி ரகு வீட்டு மொட்டை மாடி தண்ணீர்தொட்டியை குறி வைக்கலாம்.

ALSO READ:  சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

ஒன்று.. ரிமோட்டால் ஏவுகணைகள் பறக்கும்.. இல்லை ட்ரொன்கள்.. அதுவும் இல்லை.. தைட் விஷன் விமானங்கள். சங்கு உறுதி.. அதனால்தான் போர் வரவே வராது. கப்பல் படை பற்றி சொல்லவே இல்லை. நடுக்கடலில் போய் போர்க்கப்பல் மூலம் ஒற்றை மிஸைலில்.. ஒரு நாகரிகத்தையே அழித்துவிடலாம்.

இது அனைத்தையும் இது தாண்டியும் பலதும் நடக்கும். இந்திய தேசம் என்றுமே லஷ்மண் ரேகா தாண்டி நடக்காத நாடு.. இதை என்றுமே கடைபிடித்து வந்துள்ளது. அதனால் தற்போதைய நிலமையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கு கூட சாத்தியமில்லை..

ரா ஏஜன்டுகள்.. அவர்களின் கான்ட்ரேக்டர்களால்.. ஜெயிஷ் கும்பல் பாகிஸ்தானிலேயே அழிக்கப்படலாம். அதனால்தான் பாக் போலீஸ் பகவல்பூரில் ஜெயிஷ் தலைமையகத்திற்கு பாதுகாப்பு தர ஆரம்பித்து விட்டனர். இதுதான் சாத்தியம்.

– பிரகாஷ் ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories