பாகிஸ்தானுடன் போர்… இக்காலச் சூழலில் தேவையற்றதே!

pakistan terror funding3 - 2026

பாகிஸ்தானுடன் போர் வேண்டுமா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்போர் கூட, போர் கூடாது என்றே சொல்வார்கள்.

காரணம், தற்போதைய போர்கள் conventional warfare அல்லது பழைய போர்முறையின் கீழ் வராது. காசுக்கு லொண்டி அடிக்கும் ஹவுதிகளே.. ரியாத் மீது மிஸ்ஸைலை சர் சர் என்று விடுகிறார்கள்.

என்னதான் ஓட்டாண்டியானாலும், தற்போது சவுதியிடம் சில்லரையை பெற்ற பாகிஸ்தான். அதை மதரஸா கல்விக்கு என்றோ, அல்லது ரோடு போடவோ என்றெல்லாம் கதைவிட்டு.. ராணுவத்திற்கும், பிதாயீன்களை உருவாக்கவுமே பயன்படுத்தப் போகிறது.

சரி போர் வராது.. வந்தால் என்று வைத்துக்கொள்வோம்..

பாகிஸ்தான் சோமாலியா ஆகும். ஏற்கெனவே அது லேசாய் அப்படித்தான். 1971 மாதிரியான சண்டையாக இருக்காது. நிறைய வான்வெளி தாக்குதல்கள்தான். பார்டர் தாண்டி இந்திய டாங்குகள் நுழைந்தால்.. அவர்கள்.. நியூக் தடவிய மத்தாப்புகளை போடுவோம் என்று நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் பதிலுக்கு நாலு நகரங்களை அழித்தால்.. அவர்கள் தில்லி மும்பை சென்னை, பெங்களூர்.. இப்படி நாலு பக்கமும் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி அடிப்பதை தடுக்க. இஸ்ரேலிடம் இருக்கும் டெக்னாலஜியை (IRON DOME) இந்தியா வாங்கி.. இந்தியா முழுக்க அமுல்படுத்துவது சாமான்யமானது அல்ல.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

இதைவிட.. பாகிஸ்தானுடன் ஆண்டவனே சொன்னாலும்.. கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று 2 பாயின்டை விடலாம். ஒரு இழப்புமாகாது.

போர் என்று ஒன்று வந்தால்.. இழப்புகள் இந்தியாவிற்கு மிக அதிகமாக இருக்கும். போர் அறிவிப்பு ஒன்றே போதும்.. இந்திய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி முதல்.. இந்திய கரன்ஸி சென்சுரி போடும். பெட்ரோல் விலை 150 போகலாம். விலைவாசி மூன்று நான்கு மடங்கு ஆகலாம். வெளிநாட்டு முதலீடுகளை.. சடக்கென இழுத்துக் கொள்வார்கள். வட்டி ஏறும். பணவீக்கம் எகிறும்.

இதெல்லாம் போர் வரும் அறிவிப்பு வந்தாலே.! போரே வந்துவிட்டால்..?

பேரழிவு.. ராணுவத்தினருக்கும் வீடு, மனைவி, குழந்தை குட்டிகள் உண்டு.. அதை தாண்டி சிவிலியன்களின் இழப்பு.. பிசினஸ், வீடு, இன்னபிற அழியும். முன்னே மாதிரி.. விளக்கை அணைத்துவிடுங்கள்.. என்று சைரன் அலறினால்.. எதிரி ப்ளேன் பாம் போட முடியாமல் தடுமாறுவது எல்லாம் இல்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது துல்லியமாய் ஈஸ்வரி ரகு வீட்டு மொட்டை மாடி தண்ணீர்தொட்டியை குறி வைக்கலாம்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஒன்று.. ரிமோட்டால் ஏவுகணைகள் பறக்கும்.. இல்லை ட்ரொன்கள்.. அதுவும் இல்லை.. தைட் விஷன் விமானங்கள். சங்கு உறுதி.. அதனால்தான் போர் வரவே வராது. கப்பல் படை பற்றி சொல்லவே இல்லை. நடுக்கடலில் போய் போர்க்கப்பல் மூலம் ஒற்றை மிஸைலில்.. ஒரு நாகரிகத்தையே அழித்துவிடலாம்.

இது அனைத்தையும் இது தாண்டியும் பலதும் நடக்கும். இந்திய தேசம் என்றுமே லஷ்மண் ரேகா தாண்டி நடக்காத நாடு.. இதை என்றுமே கடைபிடித்து வந்துள்ளது. அதனால் தற்போதைய நிலமையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கு கூட சாத்தியமில்லை..

ரா ஏஜன்டுகள்.. அவர்களின் கான்ட்ரேக்டர்களால்.. ஜெயிஷ் கும்பல் பாகிஸ்தானிலேயே அழிக்கப்படலாம். அதனால்தான் பாக் போலீஸ் பகவல்பூரில் ஜெயிஷ் தலைமையகத்திற்கு பாதுகாப்பு தர ஆரம்பித்து விட்டனர். இதுதான் சாத்தியம்.

– பிரகாஷ் ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories