ஜூன் 18: உலக பிக்னிக் தினம்!

international picnic day
international picnic day

ஜூன் 18 உலக பிக்னிக் தினம். நாளெல்லாம் உழைத்துச் சோர்வடையும் மனிதன் தனக்கு உகந்தவர்களோடு சேர்ந்து தரமான நேரத்தை இயற்கைச் சூழலில் செலவிட விரும்புவதை இத்தகைய பிக்னிக் போன்ற தினங்கள் உறுதி செய்கின்றன.

நம் வீடுகளில் மொட்டை மாடியிலோ அல்லது நதிக்கரையிலோ கடற்கரையிலோ நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அதனையே வெளிநாட்டில் உலக பிக்னிக் தினம் என்று பெயர் சூட்டி கொண்டாடப்படுகிறார்கள் என்று கூடச் சொல்லலாம்.

சுற்றுலா வேறு. பிக்னிக் வேறு. சுற்றுலா தினம் செப்டம்பரில் வருகிறது.

பிக்னிக் நமக்கு ஒன்றும் புதிதல்ல. உறவுகள் வீட்டில் நிறைந்திருக்கும் போது நிலா சாப்பாடு சாப்பிடுவது என்பது பாரம்பரியமான ஒன்றுதான். அவரவர் வழக்கமான உணவுகளுடன் (நம் ஊராக இருந்தால் புளியோதரை… வட இந்தியாவாக இருந்தால் சப்பாத்தி) பழங்களுடன் ஆடலும் பாடலுமாக அன்றைய பொழுதை கழிப்பது மிக இன்பமானது. அது பௌர்ணமியன்று முழு நிலா வெளிச்சத்தில் இயற்கையோடு இயைந்து சுற்றம் சூழ அனுபவிக்கும் தினமாக நிறைந்து இருக்கும். இந்த கோரோனா காலத்தில் நம் குடும்பத்தினரோடு அப்படிப்பட்ட ஒரு நிலாச்சோறு நமக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும்.

கூடைகளில் சாப்பாடு தண்ணீர் குளிர்பானங்கள் பழங்கள் தின்பண்டங்கள் ஜமுக்காளம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் சென்று அமர்ந்து உண்பது என்பது அவ்வப்போது தேவைதான்.

ஆனால் தற்போது கோவிட் சூழலில் அவரவர் வீடுகளிலேயே பால்கனியிலோ மொட்டை மாடியில் அமர்ந்து உண்பது மேல். இயற்கையோடு இணைந்திருப்பதற்கு மனித மனம் ஏங்குவதை இத்தகைய நாட்கள் நிரூபிக்கின்றன.

உண்மையில் இதனை வனபோஜன தினம் என்று அழைப்பது சரியாக இருக்கும். பிக்னிக் என்பது வன போஜனம் தானே.

கார்த்திகை மாதத்தில் சிவபூஜை செய்து விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நண்பர்களோடும் உறவுகளோடும் சிவத் தலங்களுக்கோ தோட்டங்களுக்கோ சென்று அங்கேயே சமைத்து நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்து உண்பது வனபோஜனம். இதெல்லாம் நம் கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் ஏற்கனவே இருப்பதுதான்.

இங்கு இரு மாநில தெலுங்கு மக்களும் ஒவ்வொரு வருடமும் இவற்றை கட்டாயம் கடைபிடிக்கிறார்கள். அன்று ஒருவரை யொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வது விளையாட்டுகளில் ஈடுபடுவது போட்டிகள் வைத்துக்கொள்வது பரிசளித்து கொள்வது என்று மிகவும் ஆனந்தமாக கழிப்பார்கள்.

நிலாச்சோறு மட்டும்தான் இரவில் நடக்கும். இது போன்ற வனபோஜனங்கள் பகலில் நடக்கும். அது தரும் ஆனந்தமும் புதிய புதிய நட்பும் போட்டிகளும் விளையாட்டுகளும் தரும் உற்சாகமே வேறுதான்.

ஆனால் பிக்னிக் வனபோஜனம் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மிகப்பெரும் ஆபத்து இருக்கவே செய்கிறது. பிக்னிக் செல்பவர்கள் சாப்பிட்டுவிட்டு அங்கங்கே பிளாஸ்டிக் கழிவுகளை வீசியெறிந்து வருவது அந்த இடத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் பிக்னிக் செல்பவர் ஒவ்வொருவரும் சமூக நலனில் அக்கறை கொண்டு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories