ஆழ்வார்களின் மண்ணை அயோக்கியர்கள் கூறுபோட முடியாது

IMG 20180311 185111 - 2026

தென்னகத்தையும் வடபுலத்தையும் எப்பாடு பட்டாவது பிரிக்க வேண்டும் என முயல்கின்றனர், மொழி அடிப்படையில், கலாசார அடிப்படையில். ஆனால் அதற்குச் சங்கத நூல்களும் இடந்தரவில்லை, தமிழ் நூல்களிலும் இடமில்லை, வரலாறும் அவ்வாறு அமையவில்லை.

தெற்கில் தமிழகத்தில் வாழ்ந்த திராவிடரையே ராமாயணம் அரக்கராகச் சித்திரிக்கிறது எனும் வாதம் எடுபடாது.

கோதாவரிக்குத் தெற்கில் இராமபிரான் யாரையும் வதம் செய்யவில்லை. கபந்த – கர -தூடண வதம் முடிந்த பின்னர் சேதுக்கரையில் கடலரசனிடம் கொண்ட சினத்தால் அண்ணல் ஒருமுறை வில்லுயர்த்துகிறார், அவ்வளவுதான்.

மொழி அடிப்படையில் பார்த்தால் வடபுலத்திலும் பல மொழிகள் உள்ளன, ஒரே மொழி அங்கில்லை. அங்கேயும் பழக்க வழக்கங்களில் பல மாறுபாடுகள். தெற்கில் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லை.

வைணவ நூல் தமிழின் தொன்மையை ’ஆகஸ்த்யம் அநாதி’ என அறுதியிடுகிறது.

விந்தியம், வேங்கடம் போன்ற மலைத்தொடர்கள் பாரத நிலப்பரப்பைப் பிரித்தாலும் இங்கிருந்த மக்கள் பிரிந்து வாழவில்லை.

ஆன்மிகமும், கல்வியும், வணிகமும் மக்களை இணைத்தே வைத்தன. இமயமலை மறை முனிவர்களுக்கு இடமளித்தது போலவே தெற்கின் மலயமும், மஹேந்திர கிரியும் முனிவர்க்கு இடமளித்தன.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பரசுராமர் மேற்குக் கடற்பகுதியில் நில மீட்புச் செய்தார்; விதுரரும், பலராமரும் தென்னகத் தலங்களுக்கு யாத்திரை செய்தனர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் இராமபிரானைச் சொல்கின்றன. மணிமேகலை பரசுராமனைச் சொல்கிறது.

புராணங்கள் பரந்தாமனின் முதல் அவதாரமும், இறுதி அவதாரமும் பாண்டியநாட்டில் என்கின்றன. இங்கு பரசுராமர் வேள்வி இயற்றினார்; மாமன்னர்களும் வேள்வி நிகழ்த்தியுள்ளனர்.

வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் மலயத்தை, கபாடபுரத்தைச் சொல்கிறது; மஹாபாரதம் பாண்டியரைச் சொல்கிறது. மஹாகவி காளிதாஸர் ரகுவம்சத்தில் பாண்டியர் பெருமையைக் கூறுகிறார்.

ராவணன் பாண்டியரோடு சமாதான ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் எனவும் வடநூல் வாயிலாக அறிகிறோம். பிற்காலச் செப்பேடும் சான்றாக அமைகிறது.

தளவாய்புரச் செப்பேடு [9ம் நூற்0] –
”அகத்தியனோடு தமிழாய்ந்தும், மிகத் திறனுடைய வேந்தழித்து, தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன் படை முழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும்….”

தமிழகம் ஆழ்வார்களுடையது; அரி மாதவனுடையது. சொறிநாய்கள் துண்டாட முடியாது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories