December 5, 2025, 7:17 PM
26.7 C
Chennai

ஆரிய இனவாதம் பொய் என்கிறது அறிவியல்! உண்மை என்கிறான் அறிவிலி!

ariyan invasion1 - 2025

ஆரிய திராவிட இனக்கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்! அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அறிவியல் நிரூபிக்கிறது!

1) ஆரிய திராவிட இனக்கொள்கை என்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அழுகிய மூளையில் உதித்த பொய்.

2) தமிழ்நாட்டில் வாழ்ந்த கிறித்துவப் பாதிரியார் கால்டுவெல், கொல்கொத்தாவில் நீதிபதியாக இருந்த பிரிட்டிஷ் மொழியியலாளர் (Philologist) வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருதம் கற்ற ஜெர்மானிய மொழியியலாளர் மாக்ஸ் முல்லர் ஆகிய மூவரும் உருவாக்கிய, அறிவியலுக்கு எதிரான கோட்பாடே ஆரிய திராவிட இனக்கொள்கை.

3) ஆரியம் என்பது ஒரு மொழிக்குடும்பம் (language family). அது மரபினம் (ethnic race) ஆகாது. மொழிக் குடும்பத்தை மரபினமாகக் கருதும் பாரிய
தவறைச் செய்தவர்கள் இவர்கள். எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லாமல், சொல்லப்பட்ட இந்தப்பொய் பிரித்தாளும் சூழ்ச்சியை நோக்கமாகக் கொண்டது.

4) இப்போலிக் கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்.

arian invasion2 - 20255) நேச்சர் (Nature) என்று ஒரு அறிவியல் பத்திரிகை உள்ளது. உலக அளவில் அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் நிகழும் ஆராய்ச்சிகள் மற்றும் கோட்பாடுகளை வெளியிடும் பத்திரிகை இது. 1869 முதல் வெளிவரும் இப்பத்திரிகை வாரப் பத்திரிக்கை ஆகும்.

6) இவ்வளவு புகழார்ந்த நேச்சர் பத்திரிகையில் 2011இல் டூமஸ் கீவிஸ்லிட் (Toomas Kivislid) என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலையின் மரபியல் அறிஞர் (Geneticist) தன் அணியினருடன் இணைந்து ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அக்கட்டுரை ஆரிய இனக்கொள்கையை வெட்டி வீழ்த்தி விடுகிறது.

7) முப்பது பல்வேறு இனக்குழுக்களை (ethnic groups) சேர்ந்த நபர்களின் ஆறு லட்சம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.

8) மேற்கூறிய ஆறு லட்சம் மாதிரிகளும் SNP samples ஆகும். (SNP = Single Nucleotide Polymorphism). (SNP உள்ளிட்ட அறிவியல் விஷயங்கள் குறித்து தனிக்கட்டுரை பின்னர் எழுதப்படும்).

9) SNP மாதிரிகளை ஆய்வு செய்த அறிஞர் டூமஸ் கீவிஸ்லிட் குழுவினர் பின்வரும் முடிவுக்கு வந்தனர். இந்தியர்களின் மூதாதையர்களின் மரபணுக்கள்
12500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்தன.

10) ஆரியப்படையெடுப்பு அல்லது ஆரியர் வருகை என்பது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 1500இல் நிகழ்ந்தது என்றுதான் பிரிட்டிஷ்
காலனியாளர்கள் கூறுகிறார்கள்.

ariyan invasion3 - 2025

11) அது உண்மையென்றால், இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஜீன் வரத்து (Gene flow) நடந்திருக்க வேண்டும்.
அப்படி எந்த விதமான ஜீன் வரத்தும் நடைபெறவில்லை என்பதை ஆய்வு முடிகள் நிரூபித்துள்ளன.

12) இன்றிலிருந்து 12500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஜீன்கள்தாம் தற்போதும் உள்ளனவே தவிர, புதிய ஜீன் வரத்து எதுவும் இல்லை என்ற உண்மை
ஆரிய இனக்கொள்கையை வீழ்த்தி விடுகிறது.

13) மேலும் ஒட்டு மொத்த தெற்காசியர்களின் மூதாதையர்களின் ஜீன்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பிராந்திய ரீதியிலான எந்த விதமான ஜீன் வேறுபாடுகளும் இல்லை என்பதையும் ஆய்வு முடிவுகள் நிரூபித்தன.

14) இவை அனைத்தும் ஆரிய திராவிட இனக்கொள்கை என்னும் பொய்மைப் பாம்பின் உயிரைப் பிளந்து குடிக்கின்றன.

* நியூட்டன் அறிவியல் மன்றம்

  • கட்டுரையாளர்: இளங்கோ பிச்சாண்டி  Ilango Pichandy 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories