தேங்காய் கறிவடகத் துவையல்
தேவையானவை:
தேங்காய் -1 மூடி (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் -4,
புளி – 1 சுளை,
உப்பு – தேவைக்கேற்ப,
வறுத்த கறிவடகம் (வெங்காய வடகம்) 2,
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை:
தேங்காய், புளி, உப்பு, மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் வறுத்த கறிவடகத்தைச் சேர்த்து அரைக்கவும்.
எடுப்பதற்கு முன், வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரித்து, அரைத்த விழுதில் கொட்டி இவற்றையும் சேர்த்து சற்று பெருபெருவென அரைத்தெடுக்கவும். வடக வாசனை தூக்கலாக இருக்கும் இந்தத் துவையல், கட்டுச்சாதத்துக்கு ஏற்ற ஜோடி. அம்மியில் அரைக்க, ருசி கூடும்.