spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகழுத்து வலியா? அலட்சயம் வேண்டாம்! உங்களுக்காக ஆலோசனைகள்!

கழுத்து வலியா? அலட்சயம் வேண்டாம்! உங்களுக்காக ஆலோசனைகள்!

- Advertisement -
neck-pain-1

இன்று நாம் பார்க்கப் போவது கழுத்து வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் குறித்து தான். கழுத்து வலி என்பது தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும்.

ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும். மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும்.

சிலருக்கு கழுத்து வலி தவறான நிலையில் அடர்ந்து நீண்ட நேரம் தவறான கோணத்தில் கழுத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் வரும். முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும்.

கழுத்து வலிக்கான காரணங்கள்
தவறான தூக்க நிலை மற்றும் உட்காரும் நிலை
அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் மற்றும் கஷ்டம்
நீண்ட நேரம் குனிந்தவாறு படிப்பது அல்லது எழுதுவது
தலை, கழுத்து அல்லது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி வரும் கழுத்து வலிக்கான அறிகுறிகள்
கழுத்து மற்றும் சுற்றியுள்ள பகுதியில் விறைப்பு
கழுத்துப் பகுதியில் ஊசி குத்துவது போன்ற கூர்மையான வலி
கழுத்து வலியுடன், தலைவலி
எதையும் தூக்க முடியாமல் கஷ்டப்படுவது
மருத்துவரை உடனே காண வேண்டியர்கள்
தலையை அசைக்க முடியாத அல்லது திருப்ப முடியாத நிலை
தாங்கவே முடியாத அளவிலான கழுத்து வலி
எதையும் விழுங்க முடியாமல் அல்லது மூச்சு விட முடியாமல் கஷ்டப்படும் தருணம்

இயற்கை வைத்தியங்கள் கழுத்து வலிக்கு ஆரம்பத்திலேயே முறையாக சிகிச்சை அளித்து சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது மிகுந்த அசௌகரியத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

மிதமான கழுத்து வலி 1-2 நாட்களில் மறைந்துவிடும். ஆனால் அடிக்கடி கழுத்து வலி வந்தால், உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கழுத்து வலியை இயற்கையாகவே சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன.

அவைகளை கீழே விரிவாக காண்போம்.
எப்சம் உப்பு 2-3 கப் எப்சப் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு மஸ்லின் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் இந்த உப்பு மூட்டையைப் போட வேண்டும். பிறகு அந்நீரில் 1 மணிநேரம் உட்கார வேண்டும். இப்படி தினமும் 1 மணிநேரம் உட்கார்ந்தால், கழுத்து வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் நீரை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பேப்பர் டவலை எடுத்து, அதில் நனைத்து, வலிமிக்க பகுதியில் வைத்து 1-2 மணிநேரம் ஊற வையுங்கள். இல்லாவிட்டால் பாத் டப்பில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதனுள் 1 மணிநேரம் கழுத்து முழ்கும் வரை அமர வேண்டும். இதனால் கழுத்து வலி மாயமாய் மறையும்.

மசாஜ் தெரபி

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது கற்பூரத்தைப் போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த எண்ணெயை கழுத்து வலியுள்ள இடத்தில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை எப்போதெல்லாம் கழுத்து வலிக்கிறதோ, அப்போதெல்லாம் செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். யோகாசனம் குறிப்பிட்ட சில யோகாசனங்களை தினமும் செய்து வருவதன் மூலம் கழுத்து வலியில் இருந்து விடுபடலாம்.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க திரிகோணாசனத்தை தினமும் செய்யுங்கள். கோமுகாசனம் தண்டுவடம் மற்றும் முழுங்கால்களுக்கு மிகவும் நல்லது. விரிக்சாசனம் மூட்டு இணைப்புகளுக்கு மிகவும் நல்லது. ரோஸ்மேரி ஆயில் சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். * பின் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கழுத்து வலி காணாமல் போகும்.

மஞ்சள்

ஒரு டம்ளர் மாட்டுப் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். * பின் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், கழுத்து வலி போய்விடும்.

இஞ்சி

2 விரல் அளவுள்ள இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி, துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் துருவிய இஞ்சியை சேர்த்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சூடாக குடிக்க வேண்டும். இந்த இஞ்சி டீயை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, கழுத்து வலி போய்விடும்.

மிளகு 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் மிளகுத் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவுங்கள். இதை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தினால், கழுத்து வலி போய்விடும். கழுத்து பயிற்சிகள் நேராக உட்கார்ந்து, கழுத்து வட்ட சுழற்சியில் சுழற்ற வேண்டும். இதே பயிற்சியை எதிர் திசையில் மீண்டும் சுழற்ற வேண்டும். பின் கழுத்தை மேலும், கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும். பின்பு தலையை பக்கவாட்டில் தோள்பட்டையைத் தொடுமாறு அசைக்க வேண்டும். இந்த பயிற்சிகளை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்பற்ற வேண்டும். இதனால் கழுத்து வலி வருவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த பயிற்சிகள் அலுவலகங்களில் செய்வதற்கு ஏற்ற பயிற்சிகளாகும்.

neck-pain

ஐஸ் பேக்

ஒரு கையளவு ஐஸ் கட்டிகளை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். பின் அதனை வலியுள்ள கழுத்துப் பகுதியில் 15-20 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள்.

பித்த உணவுகளை அதிகம் உண்பவர்கள், எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்பவர்கள், நினைத்தவுடன் அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு கூட அதிகமாக கழுத்துவலி ஏற்படும். உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். மன அழுத்தம் கழுத்து வலியினை அதிகப்படுத்தும்.

கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்து முதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.
கழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான பொசிசனில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்படும்.

நீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் கழுத்து தசை டெம்ப்பராக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.
நாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி.புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும்.

ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது. இதைத் தவிர முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.|

இதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.
சில நேரங்களில் கழுத்து வலி தோள்பட்டை வலியாகவும் அடையாளப்படுத்தப்படும். இவற்றில் இடது பக்கம் மட்டும் நீண்ட நாட்கள் கழுத்து வலி இருந்தால் என்ன காரணி, அதற்கு மருந்தாக என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாம்.

கழுத்து வலி குணமாக
பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.
கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.
தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.
அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும் போதும் நேரான கோணத்தில் அமரவும்.
உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம். மேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.

தூங்கும் போது

தோள்பட்டை வலி உள்ளவர்கள், வலது அல்லது இடது பக்கமாக தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதேப் போல் குப்புறப்படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தோள்பட்டை வலியில் இருந்து விடுபடவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மல்லாக்கப் படுப்பதே சிறந்தது. அப்படி படுக்கும் போது, தலை மற்றும் வயிற்றில் ஒரு ஆர்தோபெடிக் தலையணையை வைத்து, வயிற்றில் உள்ள தலையணையை பிடித்தவாறு தூங்குங்கள்.

ஒருவேளை உங்களால் மல்லாக்க படுக்க முடியாவிட்டால், உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் நிலையில் படுங்கள். ஆனால் அப்படி படுக்கும் போது, தோள்பட்டையில் வலி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

முதுகு வலி இருப்பவர்கள் மல்லாக்கப் படுத்து, முழங்காலுக்கு அடியில் ஆர்தோபெடிக் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும். அதே சமயம் அடி முதுகுப் பகுதியில் சற்று தடிமனான துணியை வைத்துத் தூங்குங்கள்.

ஒருவேளை உங்களுக்கு குப்புற படுக்க பிடிக்குமானால், தலையணையை வயிற்றுப் பகுதியில் வைத்துத் தூங்குங்கள். வலது அல்லது இடது பக்கமாக தூங்க விருப்பமிருந்தால், முழங்காலை மடக்கி, சற்று குறுகிய நிலையில் தூங்குங்கள்.

கழுத்து வலி இருப்பவர்கள், ஆர்தோபெடிக் தலையணையின் மேல் இரண்டு கைகளையும் தலைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். ஒருவேளை பக்கவாட்டில் படுப்பதாக இருந்தால், உயரமான தலையணையைப் பயன்படுத்தாதீர்கள். தோள்பட்டை அளவிலான உயரத்தைக் கொண்ட தலையணையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

அதுவே குப்புற படுப்பதாக இருந்தால், தட்டையான தலையணையைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இரவு முழுவதும்ஒரே நிலையில் தூங்காமல், அடிக்கடி நிலையை மாற்றினால் தான், வலி அதிகமாவதைத் தடுக்கலாம்.

படுத்ததும் தூங்க முடியவில்லையா? அப்படியெனில் தூங்கும் போது, மொபைல், டிவி போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்பதோடு, காபி, ஆல்கஹால், எனர்ஜி மற்றும் சோடா பானங்கள், சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதை தூங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தூங்கும் அறையில் வெளிச்சம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படுத்ததும் தூங்க இன்னும் ஒரு சிறந்த வழி என்றால், அது காலையில் உடற்பயிற்சியை செய்வது தான்.

குறட்டை விடுபவர்கள், குப்புறப்படுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குப்புறப் படுக்கும் போது, அது மூச்சு விடுவதில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் நேராக படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

மென்மையான தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். இத்தகையவர்களுக்கு வலது அல்லது இடது பக்கமாக தூங்குவது தான் சிறந்தது.

தூங்கும் போது கால் வலி மற்றும் தசைப் பிடிப்புக்கள் இருந்தால், சரியாக தூங்கவே முடியாது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள், கால்களுக்கு அடியில் ஒரு உயரமான தலையணையை வைத்து தூங்குங்கள். மேலும் தூங்கும் முன் கால்களை மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக காப்ஃபைன் கலந்த பானங்கள் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், இடது பக்கமாக தூங்குவதே சிறந்தது. மேலும் இரவு நேரத்தில் காரமான உணவுகளையோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றை சாப்படுவதையோ தவிர்த்திடுங்கள்.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம்.

உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

கம்பியூட்டரை சரியான பொசிஷனில் வைத்து உபயோகிக்காதது, எப்போ பார்த்தாலும் லேப் டொப் முன்னாடியே இருக்கிறது, படுத்துக் கொண்டு கம்பியூட்டரை உபயோகிக்கிறது இதெல்லாம் இளம் வயதினருக்கு வரும் கழுத்து வலிக்கான காரணங்கள்.

கழுத்தின் பக்கத்தில் உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். “செர்வைகல் டிஸ்க்’னு சொல்லப்படும் இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை அழுத்துவதால் கழுத்து வலிஏற்படலாம். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும், கால்களுக்கும் பரவலாம். வயதானவர்களுக்கு வரக்கூடிய கழுத்து வலி “செர்வைகல் ஸ்பான்டி லைட்டிஸ்’னு சொல்லப்படுகிறது. 50 வயதுக்கு மேல் வரக்கூடியது இது. கழுத்தில் மொத்தம் 7 எலும்புகள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையில் இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.

முதுமையின் காரணமாக தேய்மானம் ஏற்படும்போது, அது பக்கத்தில் உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கோர்ட்) மற்றும் நரம்புகளில் அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டு வடம் பாதிக்கப்படுகிற இந்த நிலைக்கு “செர்வை கல் மைலோபதி’ என்று கூறப்படும்.

நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போய், கை, கால்கள் சோர்வுற்று, அந்தப் பகுதிகளில் உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருட்களைக் கூடப் பிடிக்க முடியாமல் தவற விடுவது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படிக்க முடியாது என்று மறைமுக அறிகுறிகளை உணர்வார்கள் பாதிக்கப்பட்டவர்கள். தண்டுவடம் பாதிக்கப்படுவதால் கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்களிலும் உணர்ச்சி குறையலாம்.

இன்னும் தீவிரமானால், சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சினை வரலாம். கழுத்து வலி வரும் போது, அது சாதாரண வலியாகவோ, சுளுக் காகவோதான் இருக்கும் என்று நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலும் வலி தொடர்ந்தாலோ, வலியோடு கூடவே காய்ச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

கழுத்து வலி அறிகுறிகள்:    

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

 கழுத்து வலி வரக் காரணம்:    

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

படிக்கும் பிள்ளைகள் படிக்கவும், எழுதவும் மேசையை உபயோகிக்கலாம். நிற்கிறபோது, நடக்கிற போது, உட்கார்ந்திருக்கிறபோது, கம்பியூட்டர் மொனிட்டரை பார்க்கிறபோதெல்லாம் சரியான பொசிஷனைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தூங்கும்போது 2, 3 தலையணை உபயோகிக்கக் கூடாது. மெல்லிசான ஒரே ஒரு தலையணை போதும். படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கிறது, டி.வி பார்க்கிறது, கம்பியூட்டர் உபயோகிக்கிறதெல்லாம் கூடவே கூடாது.

சாதாரண சுளுக்கா இருக்குமோ என்கிற எண்ணத்தில் கண்டவர்களிடம் சுளுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கழுத்து நரம்புகளையும் பாதிக்கும். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கழுத்து எலும்பு சவ்வு பாதிப்புகளில் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கல்சியம் அதிகள்ள உணவுகள் தினசரி உணவில் இருக்கவும். கழுத்து தசைகளை பலப்படுத்தும் பயிற்சிகளையும், தோள்பட்டைகளுக்கான பயிற்சிகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்வது மூலமாக, வலி வருமுன் இந்நோயை காக்கலாம்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு      

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்    

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை    

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe