December 6, 2025, 4:14 AM
24.9 C
Chennai

அதென்னங்க சர்க்கரை நோய்? அதுக்கு என்ன அறிகுறி?!

diabetes1

இன்று பெரும்பாலான மனிதர்களும் பெரிதும் கவலைப்படுவது சர்க்கரை நோய் என்றாகிவிட்டது. பல்வேறு பெரிய உபாதைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது சர்க்கரை நோய் என்பதால், அது குறித்து அதிகம் கவனமும் கவலையும் படுகிறார்கள் பலரும்!

அதென்ன சர்க்கரை நோய்?! சிலர் அதை நோய் என்று சொல்லக் கூடாது; சர்க்கரை அளவு குறைதல் என்கிறார்கள். நீரிழிவு நோய் என்று அதற்கு ஒரு பெயரை வைத்து, மனத்தளவில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் எனப்படுகிறது. எனினும், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவுப் பழக்கத்தின் மூலம்  எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். 

சர்க்கரை நோயின் அறிகுறிகள்: 

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

கண் பார்வை மங்குவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.

பலருக்கும் சோர்வு, அசதி, அடிக்கடி தூக்கம் வருவது போலிருத்தல் ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள்… எனவே, சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

சர்க்கரை நோய் அளவு : சர்க்கரை நோய்க்கான பரிசோதனை முதல் முறையாக செய்கையில், வெறும் வயிற்றில் நமது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு சராசரியாக 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு சக்கரை நோய் இல்லை என்று அறிந்துகொள்ளலாம்.

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு 101 முதல் 125 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி. 

சர்க்கரை அளவு 125 மி.கி./டெ.லி க்கு மேல் இருந்தால் நமது உடலில் சர்க்கரை நோய் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். 

உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க சர்க்கரை அளவு 111 முதல் 140 மி.கி./டெ.லி வரை இருந்தால் உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதுவே சர்க்கரை அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சர்க்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி. 

சர்க்கரை அளவு 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories