spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுசீறும் நாகத்தின் விஷம் முதல்.., சிறியாநங்கை சீறியபணி!

சீறும் நாகத்தின் விஷம் முதல்.., சிறியாநங்கை சீறியபணி!

- Advertisement -

சிறியாநங்கை / நிலவேம்பு மூலிகை

  1. தாவரப்பெயர் – ANDROGRAPHIS PANICULATA.
  2. தாவரக்குடும்பம் – ACANTHACEAE.
  3. வகை – பெரியா நங்கை என்றும் உள்ளது.
  4. வளரும் தன்மை :
    செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம்.

ஆறு மாதம்கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 – 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

  1. முக்கிய வேதியப் பொருட்கள் :
    ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், ‘கால்மேகின்’ என்ற கசப்புப் பொருளும் உண்டு.
  2. பயன் தரும்பாகங்கள் :
    இலை மற்றும் வேர்ப் பகுதிகள்.
  3. பயன்கள் :
    இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியா நங்கையைப் பயன்படுத்துகிறார்கள். நஞ்சுக் கடிக்கும் இதைப் பயன் படுத்துவார்கள். சிறியாநங்கை என்ற மூலிகை பெண் பெண்வசியத்தைச் செய்யும். வெங்காரத்தைப் பஸ்பமாக்கும். தேகத்தில் வனப்பை உண்டாக்கும். விசமுறிக்கும் மருந்தில் கூட்டு கூட்டு மருந்தாக செயல் படுகிறது. பெரியா நங்கை என்ற ஒரு வகையும் உண்டு.

நிலவேம்பு / சிறியா நங்கை–
மருத்துவ பயன்கள்

பாம்பை விரட்டும் சிறியாநங்கை
சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியா நங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது.,

அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும்.

அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும்.

வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம்.

தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவை; மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்…

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போகர் தனது ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில்,நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.

வீக்கம் நீங்க

சிறியாநங்கை இலைகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்றாக அரைத்து நம் உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதன் மீது பத்து போட்டுவர வீக்கத்தின் அளவானது குறைந்து விடும்.

நீரிழிவு நோய்

சிறியா நங்கை இலைப் பொடியுடன், காய்ந்த நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் இலை பொடி, இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும்.

தேமல் பிரச்சினைக்கு

சிறியாநங்கை வேருடன் அருகம்புல் வேரையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் தேமல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். இந்த மருந்து சாப்பிடும்போது உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சிறியாநங்கை சாறு எடுக்கும் முறை

சிறியாநங்கையின் இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வடிகட்டி மூலம் அதில் உள்ள திப்பிகளை நீக்கி அந்த சாற்றை மட்டும் எடுத்து மருந்தாக பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி அந்த சாற்றினை நாம் குடிக்கும் போது நமக்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு காணலாம்.

இந்த சிறியாநங்கை சாற்றை நேரடியாகவோ அல்லது மோரில் கலந்தோ குடிக்கலாம். குழந்தைகளுக்கு இந்தச் சாற்றை 3mlக்கு மேல் கொடுக்கக்கூடாது. பெரியவர்களாக இருந்தால் 10ml வரை குடிக்கலாம். காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இந்தச் சாற்றை நீண்டநாட்களுக்கு குடிக்கக்கூடாது.

  1. இந்தச் சாறு இரத்தத்தை சுத்திகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  2. புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை சுத்தப்படுத்த இந்தச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  3. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பூச்சிக்கடி வயிற்றுப்போக்கு இந்தப் பிரச்சினைகள் நீங்க பயன்படுத்தப்படுகிறது.
  4. மஞ்சள் காமாலை, மலேரியா விஷக் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
  5. சைனஸ் மற்றும் சளி தொந்தரவால் ஏற்படும் பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இது ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  6. நம் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கெட்ட தேக்கங்கள் அனைத்தும் உள்ளேயே சேர்ந்து விடுவதால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள், கொப்பளங்கள், பூச்சிகள் நீங்கவும், இவைகள் வராமல் தடுக்கவும் இந்தச் சாறு பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க இந்த நீர் கட்டிகளும் ஒரு காரணமாக அமையும்.

.சிறியா இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி ,நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி , வெந்தயப் பொடி , சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை & மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe